Friday, July 3, 2020

ஜாதக அலங்காரம் பற்றிய குறிப்பு

ஜாதக அலங்காரம் !

ஸ்ரீமான் கீரனூர் நடராஜ ஐயர் தமிழில் இயற்றிய நூல்.

சுமார் 110 சுலோகங்கள் கொண்டது இது. ஸ்ரக்தரா விருத்தத்தில் அமைந்துள்ளன.இந்த புகழ் பெற்ற ஜோதிட மூல நூலைத் தந்தவர் கணேசர் அல்லது ஸ்ரீ கணபதி ஆவார்.

ஏழு அத்தியாயங்கள் கொண்ட சிறிய நூலில் ஏழாவது அத்தியாயத்தில் இவர் தம்மைப் பற்றி வெகு சுருக்கமாக நான்கே செய்யுள்களில் கூறுகிறார்.இந்த அத்தியாயத்தின் பெயர் வம்ச வருண அத்தியாயம். அதில் இவர் தன்னைப் பற்றிக் கூறுவதன் சுருக்கத்தைப் பார்ப்போம்.

புகழ் பெற்ற இந்த உலகில் குஜராத் மன்னரின் அரசவையில் கன்ஹாஜி என்ற ஜோதிடர்களுக்குள் மகேந்திரனாக விளங்கிய பிரபல மேதை இருந்தார். அவர் பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மூன்று புத்திரர்கள் பிறந்தனர்.

மூத்தவரான சூர்யதசா மிகவும் புத்திசாலி. சிறந்த ஜோதிடருமாவார். அவருக்கு அடுத்துப் பிறந்தவர் கோபாலர்.அனைத்துக் கலைகளிலும் சிறந்தவர், மூன்றாமவரான ராமகிருஷ்ணர் ஜோதிடர்களிலெல்லாம் சிறந்தவராக விளங்கினார்.

இதில் கோபாலருக்கு மகனாகப் பிறந்தவர் கணேசர்.இவர் சாலிவாகன சகாப்தம் 1535ல் (கி.பி, 1613) பாத்ரபத மாதத்தில் ப்ரத்னபுரத்தில் இதை இயற்றினார்.” இப்படி இவர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.


இந்த நூலில் உள்ள ஏழு அத்தியாயங்கள் இவை தான் 1) சம்ஜ்ஞா அத்யாயம் 2)பாவ அத்யாயம் 3) யோக அத்யாயம் 4) விஷ கன்யா அத்யாயம் 5) ஆயுர்த்தாய அத்யாயம் 6)வ்யதியய பாவ பலாத்யாயம் 7)வம்ச வருண அத்யாயம்

 சம்ஜ்ஞா அத்தியாயத்தில் லக்னத்திலிருந்து ஒவ்வொரு பாவமாக அது எதைக் குறிக்கும் என்பதை விளக்குகிறார். லக்னத்திற்கு மூர்த்தி, அங்கம் தனு உதயம் என்று பெயர்கள் உண்டு என்பதையும் இரண்டாம் இடத்திற்கு ஸ்வ, கோச, அர்த்த,குடும்ப தன என்ற பெயர்கள் உண்டு என்பதையும் சொல்லி அதன் அர்த்தமான செல்வம்,புதையல் போன்ற சொற்களால் அதை விளக்குகிறார்.

அடுத்த அத்தியாயத்தில் ஒவ்வொரு ராசியிலும் நிற்கும் கிரகத்திற்கான பலன்களைத் தெளிவாகச் சொல்கிறார்.இப்படி ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரி வரியாக ஒவ்வொரு விஷயமாக இவர் விளக்கிச் சொல்வது கற்பவரை பரவசத்தில் ஆழ்த்தும். ஜோதிடத்தை படிப்படியாக எளிமையாகக் கற்க ஏற்ற நூல் இது.

வடை மாலை




ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை சாத்தப்படுகிறது ?

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்படுவதற்கு ஒரு புராணகதை சொல்லப்படுவது உண்டு.ஒரு சமயம் சூரிய உதயத்தின்போது சிகப்பாக இருக்கும் சூரியன் ஒரு பழமாக சின்ன குழந்தையான அனுமனுக்கு தெரிந்ததால்,அதை சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். 

பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை. அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது.

 ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார். 

இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார். 

இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் அதேபோல் வடந்தியாவில் அனுமனுக்கு ஜாங்கிரி மாலை சாத்துவார்கள் இதுவும் உளுந்தில் செய்ததுதான்.ஜாங்கிரி மாலை சாத்தினாலும் தவறுகிடையாது.

படித்ததில் பிடித்தது !

Monday, March 9, 2020

நாழிகை விநாழிகை அளவு கணித முறை.


நாழிகை விநாழிகை அளவு கணித முறை.

2 க்ஷணம் = 1 இல்லம்
2 இல்லம் = 1 காஷ்டை
2 காஷ்டை = 1 நிமிஷம்
2 நிமிஷம் = 1 துடி
2 துடி           = 1 துரிதம்
2 துரிதம்   = 1 தற்பரை
10தற்பரை = 1 பிராணன்
6பிராணன் = 1 விநாழிகை
60 விநாழிகை  = நாழிகை / கடிகை
1 நாழிகை = 360 பிராணன்
60 நாழிகை = 21600 பிராணன்
3 3/4 நாழிகை = 1 முகூர்தம்
30 நாழிகை = ஒரு பொழுது
60 நாழிகை = 1 நாள்
ஒரு நாள்  = 24 மணி
ஒரு நாழிகை = 24 நிமிடம்
2 1/2 நாழிகை = 1 மணி
1 முகூர்தம் = 1.30 மணி நேரம்

ஒரு நாளைக்கு சுமார் 21600 சுவாசங்கள் என்பதையே சிதம்பரத்தில் பொன்னம்பல கூரையின் அணிகளாக வெய்து இருக்கின்றனர்.

மனிதனின் ஆயுள் சக்கரம் 120 வருடங்கள் எனில் 21600 x 365.25 x 120..

Thursday, November 14, 2019

நேரமே உலகம் !





காலதேவி அம்மன் 

உங்களின் நேரத்தை பொற் காலமாக மாற்றிக் கொள்ள காலதேவியை வணங்குங்கள்.


12 ராசிகள்,
27 நட்சத்திரங்கள்,
9 நவ கிரஹங்கள் அமைந்துள்ள 'காலதேவி அம்மன்' சிலை.

ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது.அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால்,அதை நம்ப முடிகிறதா!அதுவும் நம்மூரில்.....

அக்கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி கிராமத்தில் உள்ளது. இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம்

நேரமே உலகம்'’

புராணங்களில் வரும் கால ராத்திரியை தான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர். இவள் இயக்கத்தில் தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது.

காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு.

நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம்.

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட்டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது.

இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்றுதான்

பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது.

கோயிலை தலா 11 சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் போதும்.

கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை காலச் சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது,  தாயே ! எனது நேரத்தை உன் வசம் ஒப்படைக்கிறேன். வரும் காலத்தை எனக்கு நல்லதாக  தந்தருள வேண்டுகிறேன் என வேண்டினால் போதும்.

செல்லும் வழி:

மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, ஆட்டோக்களிலோ செல்லமுடியும்.

தெரியாதவர்கள் சாதாரண நாட்களில் செல்வதை விட பெளர்ணமி, அமாவாசை நாட்களில் செல்வதே சிறப்பு.

இரவு நேரக் கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது.

Friday, November 1, 2019

காலங்களை ஆள்வதில் கோள்களின் விளையாட்டு






காலங்களை கிரங்கங்கள் எவ்வாறு ஆள்கிறது என்பதை காண்போம்

சூரியன்                    அயனம் 
சந்திரன்                   நிமிடம் 
செவ்வாய்               வாரம் 
புதன்                         ருது ( இரண்டு மாதங்கள் )
குரு                           மாதம் 
சுக்ரன்                       பட்சம் ( 15 நாட்கள் )
சனி                           வருடம் 

சூரிய வீதியை கிரகங்கள் கடக்கும் கால அளவுகளை நாம் அறிவோம் .

ஹோரை மற்றும் பிரசன்னத்தின் வழியே  ஒருவரின் பலனை துல்லியமாக அறிய  கிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்ட காலங்களை அறிவது அவசியம். மேற்கண்ட விதிகளின் வழியே பலன்கள் ஏற்படும் காலங்களை மிக துல்லியமாக அறிய முடியும் .

சப்த தாதுக்களும் கிரகங்களும்




சப்த தாதுக்களும் கிரகங்களும் 

உண்ணும் உணவு உடலில் ஏழு தாதுக்களாக பிரியும். இவையே உடலை வளர்க்கும் மற்றும் பாதுகாக்கும். அவற்றிற்கு உரிய காரக கிரகங்கள் இவை

சூரியன்                    எலும்பு 
சந்திரன்                  இரத்தம் 
செவ்வாய்              மச்ஜை 
புதன்                         தோல் 
குரு                            கொழுப்பு 
சுக்ரன்                      சுக்ல சுரோணிதம் 
சனி                            தசை

ஜாதகத்தில் சூரியன் பலமற்று காணப்பட்டால் எலும்பு தேய்மானம் உண்டாகும். சந்திரன் பலமற்று இருப்பின் இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும்.

Wednesday, October 30, 2019

நைசர்க்கிக தசை


நைசர்க்கிக தசை 

ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்படும்  சந்தோஷமான, துக்க கரமான நிகழ்ச்சிகள் எப்போது வரும் என்பதைக் கண்டுபிடிக்க பலவகையான கிரக தசைகளைச் சொல்லியிருக்கின்றார்கள். விம்சோத்திரி தசை, பிண்ட தசை, நைசர்க்கிக தசை, அம்ச தசை, காலச்சக்கர தசை, ஜைமினி சூத்திரத்தின் படியான சர ராசி தசை, ஸ்திர தசை, திரிகோண தசை என பல வகைகள் உள்ளன . அவற்றில் நைசர்க்கிக தசை என்ன என்பதை இங்கே காண்போம்.

வராகமிகிரரின் பிருஹஜ் ஜாதகத்தில் நைசர்க்கிக தசை கணிப்பது குறித்து ஒரு இலகுவான வழியும் கொடுத்திருக்கிறார். அதாவது  ஒருவனின் வாழ்க்கையில்

முதல் ஒரு வருடம் சந்திர தசையும்

பின் இரண்டு வருடங்கள் செவ்வாய் தசையும்

பின்னர் ஒன்பது வருடங்கள் புதன் தசையும்

அடுத்து இருபது வருடங்கள் சுக்கிர தசையும் நடக்கும். ( 13 -32 )

33 முதல் 50 வயது முடிய குரு தசையும்

51 முதல் 70 முடிய சூர்ய தசையும்

எழுபதுக்கு மேல் மரணம் வரைக்கும் சனி தசையும் நடக்கும்
என்று சொல்லியிருக்கிறார்.

இது நைசர்க்கிக தசை அதாவது இயற்கையான தசை என்று அழைக்கப்படுகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...