Tuesday, July 30, 2013

வார நாட்களின் பெயர் காரணங்கள்!



பைபிள் (ஆதியாகமம் ) மற்றும் திருகுரான் (கசசுல் அன்பியா ) கூற்றுப்படி இறைவன் ஆதியில் விண்ணுலகையும் மண்ணுலகையும்   ஆறு நாள்களில் படைத்தார். தாம் செய்த படைப்பை ஏழாம் நாளில் முடித்திருந்தார்.அந்த ஏழாம் நாளை ஆசீர்வதித்து புனிதப்படுத்தினார். இவ்வாறே ஏழு நாட்கள் கொண்ட வாரம் துவங்கியது! ஆனால் வார நாட்களின்  பெயர்கள் எவ்வாறு தோன்றின என்பதை குறிக்கும் ஆங்கில குறிப்புகள் சிலவற்றை இங்கே காண்போம். 

The Naming of the Days
The Greeks named the days week after the sun, the moon and the five known planets, which were in turn named after the gods Ares, Hermes, Zeus, Aphrodite, and Cronus. The Greeks called the days of the week the Theon hemerai “days of the Gods”. The Romans substituted their equivalent gods for the Greek gods, Mars, Mercury, Jove (Jupiter), Venus, and Saturn. (The two pantheons are very similar.) The Germanic peoples generally substituted roughly similar gods for the Roman gods, Tiu (Twia), Woden, Thor, Freya (Fria), but did not substitute Saturn.
Sunday—Sun’s day
Middle English sone(n)day or sun(nen)day
Old English sunnandæg “day of the sun”
Germanic sunnon-dagaz “day of the sun”
Latin dies solis “day of the sun”
Ancient Greek hemera heli(o)u, “day of the sun”
Monday—Moon’s day
Middle English monday or mone(n)day
Old English mon(an)dæg “day of the moon”
Latin dies lunae “day of the moon”
Ancient Greek hemera selenes “day of the moon”
Tuesday—Tiu’s day
Middle English tiwesday or tewesday
Old English tiwesdæg “Tiw’s (Tiu’s) day”
Latin dies Martis “day of Mars”
Ancient Greek hemera Areos “day of Ares”
Tiu (Twia) is the English/Germanic god of war and the sky. He is identified with the Norse god Tyr. Mars is the Roman god of war. Ares is the Greek god of war.
Wednesday—Woden’s day
Middle English wodnesday, wednesday, or wednesdai
Old English wodnesdæg “Woden’s day”
Latin dies Mercurii “day of Mercury”
Ancient Greek hemera Hermu “day of Hermes”
Woden is the chief Anglo-Saxon/Teutonic god. Woden is the leader of the Wild Hunt. Woden is from wod “violently insane” + -en “headship”. He is identified with the Norse Odin.
Mercury is the Roman god of commerce, travel, theivery, eloquence and science. He is the messenger of the other gods.
Hermes is the Greek god of commerce, invention, cunning, and theft. He is the messenger and herald of the other gods. He serves as patron of travelers and rogues, and as the conductor of the dead to Hades.
Thursday—Thor’s day
Middle English thur(e)sday
Old English thursdæg
Old Norse thorsdagr “Thor’s day”
Old English thunresdæg “thunder’s day”
Latin dies Jovis “day of Jupiter”
Ancient Greek hemera Dios “day of Zeus”.
Thor is the Norse god of thunder. He is represented as riding a chariot drawn by goats and wielding the hammer Miölnir. He is the defender of the Aesir, destined to kill and be killed by the Midgard Serpent.
Jupiter (Jove) is the supreme Roman god and patron of the Roman state. He is noted for creating thunder and lightning. Zeus is Greek god of the heavens and the supreme Greek god.
Friday—Freya’s day

Middle English fridai
Old English frigedæg “Freya’s day”
composed of Frige (genetive singular of Freo) + dæg “day” (most likely)
or composed of Frig “Frigg” + dæg “day” (least likely)
Germanic frije-dagaz “Freya’s (or Frigg’s) day”
Latin dies Veneris “Venus’s day”
Ancient Greek hemera Aphrodites “day of Aphrodite”
Freo is identical with freo, meaning free. It is from the Germanic frijaz meaning “beloved, belonging to the loved ones, not in bondage, free”.
Freya (Fria) is the Teutonic goddess of love, beauty, and fecundity (prolific procreation). She is identified with the Norse god Freya. She is leader of the Valkyries and one of the Vanir. She is confused in Germany with Frigg.
Frigg (Frigga) is the Teutonic goddess of clouds, the sky, and conjugal (married) love. She is identified with Frigg, the Norse goddess of love and the heavens and the wife of Odin. She is one of the Aesir. She is confused in Germany with Freya.
Venus is the Roman goddess of love and beauty. Aphrodite (Cytherea) is the Greek goddess of love and beauty.
Saturday—Saturn’s day
Middle English: Saterday
Old English : sæter(nes)dæg “Saturn’s day”
Latin dies Saturni “day of Saturn”
Ancient Greek hemera Khronu “day of Cronus”
Saturn is the Roman and Italic god of agriculture and the consort of Ops. He is believed to have ruled the earth during an age of happiness and virtue.
Cronus (Kronos, Cronos) is the Greek god (Titan) who ruled the universe until dethroned by his son Zeus.
Sources:
William Morris, editor, The American Heritage Dictionary of the English Language, New College Edition, Houghton Mifflin Company, Boston, 1976.
Webster’s Encyclopedic Unabridged Dictionary of the English Language, Portland House, New York, 1989.

William Matthew O’Neil, Time and the Calendars, Sydney University Press, 1975.

Saturday, July 13, 2013

சந்திர சித்தாந்த கணிதம் -2



சந்திரன் பூமியை முழுமையாகச் சுற்றிவர எடுக்கும் காலம் ஒரு சந்திர மாதம் ஆகும். சந்திர மாதத்தைக் பயன்படுத்தும் முறைகளில் மாதத் தொடக்கம் கொள்வதில் இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன. ஒரு முறையில் அமாவாசையை மாதத் தொடக்கமாகக் கொண்டு மாதங்கள் பிறக்கின்றன இம்முறைக்கு அமாந்த முறை என்றும் , பூரண சந்திரனை மாதத் தொடக்க மாகக் கொள்வதை பூர்ணிமாந்த முறை என்றும் வழங்கப்படுகிறது.


சந்திரமான முறையில் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் வரும் பூரணை எந்த நட்சத்திரத்தில் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரே அம் மாதத்திற்கு இடப்பட்டது. இதன்படி சித்திரை மாதத்துப் பூரணை சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசி மாதத்துப் பூரணை விசாக நட்சத்திரத்திலும் வருகின்றன. இவ்வாறே ஏனைய மாதங்களும் அவற்றின் பெயர் கொண்ட நட்சத்திரங்களில் வருவதை அறியலாம். இதனைப் பின்பற்றியே ஒவ்வொரு சந்திரமாதத்துக்கும் அண்மையிலிருக்கும் சூரியமான முறையில் அமைந்த தமிழ் மாதங்களுக்கும் அதே பெயர் இடப்பட்டுள்ளது.

சித்திரை மாதம் என்னும் சைத்ரா மாதம்.
சித்திரை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். 
வைகாசி மாதம் என்னும் வைசாக மாதம் - 
விசாக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். 
ஆனி மாதம் என்னும் ஜேஷ்டா மாதம் - 
கேட்டை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம்..
ஆடி மாதம் என்னும் ஆஷாட மாதம்
அவிட்ட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற  மாதம். 
ஆவணி மாதம் என்னும் சிரவண மாதம்
திருவோண நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். 
புரட்டாதி மாதம் என்னும் பத்ரபாத மாதம்
உத்திரட்டாதி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற  மாதம். 
ஐப்பசி மாதம் என்னும் அசுவினி மாதம்
அசுவினி நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். 
கார்த்திகை மாதம் என்னும் கிருத்திகா மாதம்-
கார்த்திகை நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். 
மார்கழி மாதம் என்னும் மார்கசீர மாதம்
மிருகசீரிட நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். 
தை மாதம் என்னும் பௌஷ்ய மாதம் - 
பூச நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். 
 மாசி மாதம்: என்னும் மக மாதம்
மக நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். 
பங்குனி மாதம் என்னும் பல்குணி மாதம்-
பல்குணி  நட்சத்திரத்தோடு தொடர்பாகப் பௌர்ணமி வருகின்ற மாதம். 

Thursday, July 11, 2013

சந்திர சித்தாந்த கணிதம்.



சந்திரனின் ஓட்டத்தைக் கொண்டு கணிக்கும் வர்த்தமானம் சந்திர சித்தாந்த கணிதம் என்று அழைக்கப்படுகிறது.பூமிக்கு மிக நெருக்கமான கிரகம் சந்திரன். மேலும் சந்திரனின் சுற்றுவட்ட பாதை பூமியை மையமாக கொண்டது. சூரியனை பூமி சுற்றுவதால் ஏற்படும் கால வர்த்த மானங்களை முன்னர் கண்டோம். அதுபோல் சந்திரனின் ஓட்டத்தால் ஏற்படும் கால வர்தமானங்களை இனி காண்போம்.

நமது பஞ்சாங்க கணிதத்தில் முக்கிய பங்கு சந்திர சித்தாந்த கணிதத்தை கொண்டே கணிக்கப்படுகிறது. வாரம், திதி, நட்சத்திரம், யோகம் கரணம் ஆகிய பஞ்ச அங்கத்தில் வாரத்தை தவிர்த்து மற்ற நான்கும் சந்திரனின் நிலையை கொண்டே அறியப்படுகிறது.

திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைவெளியை குறிப்பதாகும். சந்திரனின் வட்டப்பாதை முப்பது நாட்களை கொண்டதாகும். பதினான்கு வளர்பிறை காலங்களையும், பதினான்கு தேய்பிறை காலங்களையும், ஒரு பூரண நிலவும் ( பௌர்ணமி ), ஒரு பூரண மறைவும் ( அமாவாசை ) கொண்ட சுற்றாக அது அமைகிறது. சுற்று வட்ட பாதையின் மொத்த அளவான 360' பாகையை  நாள் ஒன்றிற்கு 12 பாகை வீதம் கடக்கின்றது.சூரியனும் சந்திரனும் ஏக பாகையில் உள்ள நிலை அமாவாசை என்றழைக்கப்படுகிறது.அதிலிருந்து வளர்பிறையின் முதல் நாள் கணக்கிடப்படுகிறது.

வளர்பிறை காலம் ( சுக்லபட்சம் )

0  முதல் 12 பாகை வரை பிரதமை திதி ( முதல் நாள் ).
12 முதல் 24 பாகை வரை துவிதியை திதி ( இரண்டாம் நாள் )
24 முதல் 36 பாகை வரை திருதியை திதி ( மூன்றாம் நாள் )
36 முதல் 48 பாகை வரை சதுர்த்தி  திதி ( நான்காம் நாள் )
48 முதல் 60 பாகை வரை பஞ்சமி திதி ( ஐந்தாம் நாள் )
60 முதல் 72 பாகை வரை சஷ்டி திதி ( ஆறாம் நாள் )
72 முதல் 84 பாகை வரை சப்தமி திதி ( ஏழாம் நாள் )
84 முதல் 96 பாகை வரை அஷ்டமி திதி ( எட்டாம் நாள் )
96 முதல் 108 பாகை வரை நவமி திதி ( ஒன்பதாம்  நாள் )
108 முதல் 120 பாகை வரை தசமி திதி ( பத்தாம் நாள் )
120 முதல் 132 பாகை வரை ஏகாதசி திதி ( பதினோராம் நாள் )
132 முதல் 144 பாகை வரை துவாதசி திதி ( பன்னிரெண்டாம் நாள் )
144 முதல் 156 பாகை வரை திரியோதசி திதி ( பதிமூன்றாம் நாள் )
156 முதல் 168 பாகை வரை சதுர்த்தசி திதி ( பதிநான்காம் நாள் )
168 முதல் 180 பாகை வரை பௌர்ணமி  ( பதினைந்தாம் நாள் )
சூரியனுக்கு நேர் எதிர் பாகையில் நிலவு முழுமையாக பிரகாசிக்கும் நாள்.
அதன் பிறகு தேய்மானம் ஒவ்வொரு 12 பாகைக்கும் தொடர்ந்து 15-ந்தாம் நாள் 
ஏக பாகையில் சூரியனும் சந்திரனும் இணைவது அமாவாசையாகும்.

தேய்பிறை காலம் ( கிருஷ்ணபட்சம்,அமரபட்சம் )


180  முதல் 192 பாகை வரை பிரதமை திதி ( முதல் நாள் ).
192 முதல் 202 பாகை வரை துவிதியை திதி ( இரண்டாம் நாள் )
202 முதல் 214 பாகை வரை திருதியை திதி ( மூன்றாம் நாள் )
214 முதல் 226 பாகை வரை சதுர்த்தி  திதி ( நான்காம் நாள் )
226 முதல் 238 பாகை வரை பஞ்சமி திதி ( ஐந்தாம் நாள் )
238 முதல் 250 பாகை வரை சஷ்டி திதி ( ஆறாம் நாள் )
250 முதல் 262 பாகை வரை சப்தமி திதி ( ஏழாம் நாள் )
262 முதல் 274 பாகை வரை அஷ்டமி திதி ( எட்டாம் நாள் )
274 முதல் 286 பாகை வரை நவமி திதி ( ஒன்பதாம்  நாள் )
286 முதல் 298 பாகை வரை தசமி திதி ( பத்தாம் நாள் )
298 முதல் 310 பாகை வரை ஏகாதசி திதி ( பதினோராம் நாள் )
310 முதல் 322 பாகை வரை துவாதசி திதி ( பன்னிரெண்டாம் நாள் )
322 முதல் 336 பாகை வரை திரியோதசி திதி ( பதிமூன்றாம் நாள் )
336 முதல் 348 பாகை வரை சதுர்த்தசி திதி ( பதிநான்காம் நாள் )
348 முதல் 360 பாகை வரை அமாவாசை ( பதினைந்தாம் நாள் )

இவ்வாறாக முப்பது நாள்களை கொண்ட சுற்று சந்திர சித்தாந்த கணிதத்தில் ஒரு மாதம் என்றழைக்கப்படுகிறது. திங்கள் என்பது மாதத்தையும், சந்திரனையும், வாரத்தின் ஒரு நாளையும் குறிகின்றது.இந்த திதிகளே இன்று தேதி என்று மருவி அழைக்கப் படுகின்றது.

Wednesday, June 5, 2013

சூரிய சித்தாந்த கணிதம்


காலங்களின் வர்த்தமானங்கள் இரு பகுப்பாக பிரிந்துள்ளது.அவை சூரியனை மையமாக கொண்டு கணிக்கும் வர்த்தமானம் சூரிய சித்தாந்த கணிதம் என்றும்.சந்திரனின் ஓட்டத்தைக் கொண்டு கணிக்கும் வர்த்தமானம் சந்திர சித்தாந்த கணிதம் என்றும் அழைக்கப்பெறும்.

மேஷ ராசி முதல் மீனம் வரை சூரியனின் ஒரு முழு சுற்று ஒரு வருடம் ஆகிறது. நாள் ஒன்றிற்கு ஒரு பாகை வீதம் 360 பாகையை 365.25 நாட்களின் சூரியன் சுற்றிவருகிறது. சித்திரை மாதம் சூரியனின் நுழைவு மேழத்தில் ஏற்படும்போது வருடபிறப்பு கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஒரு பெயரை தாங்கி வருகிறது. இந்த வருடம் விஜய வருடம் என்றழைக்கப் படுகிறது. 

மேலும் சூரிய வட்டப்பாதை இரண்டு அயனங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உத்தராயண புண்ணிய காலமும் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தட்சணாயன புண்ணிய காலமும் நடைபெறும். பருவகாலங்கள் ஆறாக பிரிக்கப்பட்டு முறையே ஒவ்வொரு இரண்டு மாதங்களும் ஒரு பருவ காலமாக கணக்கிடப்படுகிறது.

சூரிய சித்தாந்த கணிதப்படி 360  பாகையும் 12 பாகங்களாக பிரிக்கப்பட்டு பன்னிரு ராசி  மண்டலங்களாக அமைகின்றது. பன்னிரு இராசிகளில் சூரியனின் சஞ்சார காலம் பன்னிரு மாதங்களாக பிரிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு ராசியும் முறையே 30  பாகை கொண்டது. அந்தந்த இராசிமானத்தில் உள்ள நட்சத்திர அமைப்பே அந்த ராசியின் பெயராக அமைந்துள்ளது. அதுவே மாதத்தின் பெயராகவும் வழங்கப்பெறுகிறது.

பாகை வாரியாக     ராசிகள்       மாதத்தின் பெயர்         அயனங்களின் தொடக்கம் 
0'          to    30'              மேஷம்           மேஷ மாதம் 
30'        to    60'              ரிஷபம்           ரிஷிப மாதம் 
60'        to    90'              மிதுனம்          மிதுன மாதம் 
90'        to   120'             கடகம்            கடக மாதம்                தட்சணாயணம் தொடக்கம் 
120'      to   150'             சிம்மம்           சிங்க மாதம் 
150'      to   180'             கன்னி            கன்னி மாதம் 
180'      to   210'             துலாம்           துலா மாதம் 
210'      to   240'             விருச்சிகம்   விருச்சிக மாதம் 
240'      to   270'             தனுர்               தனுர் மாதம் 
270'      to   300'             மகரம்              மகர சங்கராந்தி        உத்தராயணம் தொடக்கம் 
300'      to   330'             கும்பம்             கும்ப மாதம் 
330'      to   360'             மீனம்                மீன மாதம் 

இவ்வாறாக  சூரியன் பிரதிமாதம் ஒவ்வொரு ராசிமானத்தில் பெயர்ச்சி அடையும் போது அந்த ராசிமானத்தின் பெயரே அந்த மாதத்திற்கு பெயராக அமைகிறது. மேலும் சூரியனை கொண்டே வருடம், அயனம், ருதுக்கள், மாதம், வாரம் மற்றும் நாட்களின் துவக்கம் கணிக்கப்படுகிறது. 

Tuesday, June 4, 2013

பூமியின் சுற்றுவட்டம்.



பூமி சூரியனை மையமாக கொண்டு சுற்றும் காலவர்த்தமானம்.

பூமியின் சுற்றுவட்ட பாதை சுமார் 149.59787 மில்லியன் கிலோமீட்டர். மணிக்கு 108000 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனை சுற்றுகிறது. 360 டிகிரி வட்ட பாதையை நாள் ஒன்றிற்கு 1 டிகிரி விதம் கடக்கிறது.பூமி சூரியனை சுற்றிவர 365.25 நாட்கள் ஆகும். இது ஓர் ஆண்டு என சூர்ய சித்தாந்தப்படி கணக்கிடப்படுகிறது. 

மேலும் பூமி சூரியனுக்கு வல இட பாகமாக செல்வதை இரண்டு அயனமாக பிரித்தார்கள்.பூமியிலிருந்து பார்வைக்கு சூரியன் வட பாகமாக செல்வதை உத்திராயண புண்ணியகாலம் என்றும் (ஆடி மாதம் முதல் மார்கழி வரை) பின்னர்  தென்பாகமாக செல்வதை தட்சயனாயண புண்ணியகாலம் (தை முதல் ஆனி மாதம் வரை)என்றும் பெயரிட்டனர். பூமியின் சுற்றால்  ஏற்படும் பருவநிலைகளை ஆறுவகையாய் பிரித்தனர்.  





ஓர் ஆண்டை கார்காலம், கூதிர்காலம், ​முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் என ஆறு பருவங்களாக பிரித்தனர்.மேலும் இவை பூமியின் ஒவ்வொரு இடங்களிலும் வெவ்வேறு பருவ காலங்கள் அதன் அமைப்பை கொண்டு வேறுபடும்.இந்திய பிரேதேசத்தில் உண்டாகும் பருவநிலைகள்.

கார்காலம்: இது தமிழ் மாதமான ஆவணி, புரட்டாசியை உள்ளடக்கியது.

கூதிர்காலம்: இது தமிழ் மாதமான ஐப்பசி, கார்த்திகையை உள்ளடக்கியது. இலைகள் கூம்பி உதிர்வது கூதிர் எனப்படும்.

முன்பனிக்காலம்: தமிழ் மாதமான மார்கழி, தையை உள்ளடக்கியது.

பின்பனிக்காலம்: இது தமிழ் மாதமான மாசி, பங்குனியை உள்ளடக்கியது.

இளவேனில்காலம்: இது தமிழ் மாதமான சித்திரை, வைகாசியை உள்ளடக்கியது.

முதுவேனில்காலம்: இது தமிழ் மாதமான ஆனி, ஆடி யை உள்ளடக்கியது.

இவை முறையே சமஸ்கிருதத்தில்

1.வசந்த ருது 
2.க்ரிஷ்ம ருது
3.வர்ஷ ருது
4.சரத் ருது
5.ஹேமந்த ருது
6.சிசிர ருது  
என அழைக்கப்படுகிறது. 

ஆக பூமியின் சுற்று வட்டம்
1.ஒரு ஆண்டு எனவும்
2.இரண்டு அயனம் எனவும்
3.ஆறு ருதுக்களாகவும்
4.பன்னிரு மாதங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த மாத கணக்கு சூரிய வர்த்தமானம் ,சந்திர வர்த்தமானம் என இருபிரிவுகளை கொண்டது.மேலும் மாத கணக்கு பல்வேறு முறைகளில் எவ்வாறு கணக்கிடபடுகிறது என்பதையும் இனி காண்போம்.






கிரக வர்த்தமானம்.


கிரகங்கள் சூரியனை மையமாக கொண்டு  சுற்றி வரும் காலத்தை கணிக்கும் கால வர்த்தமானம்.

புதன் சூரியனை சுற்றிவர                     88 நாட்கள் ஆகும்.
வெள்ளி சூரியனை சுற்றிவர             225 நாட்கள் ஆகும்.
பூமி சூரியனை சுற்றிவர                      365.25 நாட்கள் ஆகும்.
செவ்வாய் சூரியனை சுற்றிவர         687 நாட்கள் ஆகும்.
வியாழன் சூரியனை சுற்றிவர            12 வருடங்கள் ஆகும்.
சனி சூரியனை சுற்றிவர                       29.5 வருடங்கள்  ஆகும்.
யுரேனஸ் சூரியனை சுற்றிவர           84 வருடங்கள் ஆகும்.
நெப்டியூன் சூரியனை சுற்றிவர       165 வருடங்கள் ஆகும்.

மேற்கண்ட நாட்கள் பூமியின் நாட்களை கொண்டே நாம் அறிவதற்கு சுலபமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் வியாழனில் இருந்து பூமியின் சுழற்சியை கணக்கிடுவதாக இருந்தால் ஒரு வியாழ ஆண்டிற்கு பூமி பன்னிரண்டு முறை சுற்றுவதாக கொள்ள வேண்டும்.அதனதன் இடத்திற்கேற்ப கால கணிதம் வேறுபடும்.

சூரிய வட்டம்.


காலங்கள் எவ்வாறு கணிக்கப்படுகின்றது என்பதை இங்கே இன்னும் சற்று விரிவாக காண்போம்.இந்த வானமண்டலம் கற்பனைக்கு எட்டாத அளப்பரியது. காலங்களை அளப்பதற்கு இங்கே பல மையங்கள் இருக்கின்றன.

1.சூரியன் சுற்றி வரும் பால்வெளியை மையமாக கொண்டு கணிக்கும் கால வர்த்தமானத்தை அறிவியல் ரீதியாக கண்டோம். ஜோதிட சித்தாந்தப்படி சூரிய வட்டம் அறுபது ஆண்டுகள் கொண்டதாக அமைகிறது. அவையாவன 

1.பிரபவ         2.விபவ        3.சுக்கில     4.ப்ரமோதூத     5 ப்ரஜோத்பத்தி  
6.ஆங்கிரஸ     7. ஸ்ரீமுக      8.பவ         9.யுவ           10.தாது 
11.ஈசுவர        12.வெகுதான்ய  13.ப்ரமாதி    14.விக்கிரம      15.விஷு  
16.சித்ரபானு    17.சுபானு      18.தாரண      19.பார்த்திப      20.விய
21.ஸர்வஜித்    22.ஸர்வதாரி  23.விரோதி     24.விக்ருதி      25.கர  
26.நந்தன      27.விஜய       28.ஜய        29.மன்மத       30.துர்முகி 
31.ஹேவிளம்பி 32.விளம்பி     33.விகாரி    34.சார்வரி        35.ப்லவ 
36.சுபகிருது    37.சோபகிருது   38.குரோதி   39.விசுவாவசு     40.பராபவ 
41.ப்லவங்க    42.கீலக        43.சௌமிய  44.சாதாரண       45.விரோதிகிருது 
46.பரிதாபி     47.ப்ரமாதீ      48.ஆனந்த    49.ராக்ஷஸ       50.நள 
51.பிங்கள      52.களயுக்தி    53.சித்தார்த்தி  54.ரௌத்ரி       55.துன்மதி 
56.துந்துபி     57.ருத்ரோத்காரி 58.ரக்தாக்ஷி   59.குரோதன      60.அக்ஷய
ஒரு மனிதன் வாழ்நாளில் ஒரு சூரிய வட்டத்தை கடப்பதை உன்னதமாக வகுத்துள்ளனர் சான்றோர்கள். சஷ்டி ஆப்த பூர்த்தி என்று இதை கொண்டாடுவர். அதற்கு முன் இறக்கும் மனிதனின் மரணம் அகால மரணமாகவே கொள்ளப்படும்.

Thursday, May 16, 2013

கால கணிதம்.





சூரியன் பால்வெளியை சுற்றிவர 250 மில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று பார்த்தோம்! சோதிட கணிதத்தின் முறையே சூரியனின் வட்டப்பாதை 60 ஆண்டுகள் என கணிக்கப் பட்டிருக்கிறது. சனி கிரகம் சூரியனை சுற்றி வர 30 வருடங்கள் ஆகிறது. வியாழன் பூமியை சுற்றி வர 12 வருடங்கள் ஆகிறது. இவ்வாறான கிரங்களின் சுழற்சி எவ்வித விஞ்ஞான கருவிகள் இன்றி வேதகாலம் முதற்கொண்டு கணிக்கப்பட்டுள்ளது வியப்பிற்குரியதே! 

இன்றைய விஞ்ஞான சாதங்களின் துணைகொண்டு கிரங்களின் ஓட்டங்களை மிக துல்லியமாக கணிக்க முடிகிறது.அதே வேளையில் இச்சாதனங்கள் இன்றி இந்திய வான சாஸ்திரம் மிக துல்லிய அளவைகளை கொண்டதாக இருந்தது உலக வானவியல் ஆராய்ச்சியாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

இந்தியாவின் முதல் விண்வெளி செயற்கைகோள் சோவியத் ஒன்றியத்தால் ஏப்ரல் 19, 1975 இல் கப்புஸ்டீன் யார் என்ற இடத்தில் இருந்து கொஸ்மொஸ்-3 எம் என்ற விண்ணோடத்தில் செலுத்தப்பட்டது. ஆரியபட்டா (Aryabhata) என்பது இந்தியாவின் முதலாவது செயற்கைகோள் ஆகும். இப்பெயர் புகழ்பெற்ற இந்திய வானியலாளரான ஆரியபட்டா என்பவரின் நினைவாக இச் செய்மதிக்கு அப்பெயர் சூட்டப்பட்டது.

ஆரியபட்டா (கிபி 476 ~ 550) என்பவர் இந்தியக் கணிதவியலின் செந்நெறிக் காலத்தைச் சேர்ந்த புகழ் பெற்ற கணிதவியலாளரும், இந்திய வானியலாளர் களுள் முதன்மையானவரும் ஆவார். அவருடைய மிகவும் புகழ் பெற்ற பணிகள் ஆர்யபட்டீய (கிபி 499, 23 வயதில்) மற்றும் ஆரிய-சித்தாந்தம் ஆகும்.

இயற்கணிதத்தைச் சார்ந்து முதன் முதலில் உலகில் எழுதப்பட்ட நூல் இந்தியாவில் ஆரியபட்டாவால் 5ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இது பீஜகணிதம் என்று பெயர்கொண்டது.பாடல் வடிவில் அமைந்துள்ள ஆரியபட்டீயம், கணிதவியல், வானியல் என்பன தொடர்பான கண்டு பிடிப்புக்கள் பலவற்றைக் கொண்டுள்ளது. தொடர்ந்த பல நூற்றாண்டுகளிலும் இந்தியக் கணிதவியலில் இந்நூல் செல்வாக்குச் செலுத்தியது.

மிகச் சுருக்க வடிவில் இருந்த இந்நூலுக்கு, விரிவான உரைகளை இவரது மாணவரான முதலாம் பாஸ்கரரும் தனது  சித்தாந்த சிந்தாமணி என்ற நூலில் பீஜகணிதம், கோள்கணிதம், கிரககணிதம், லீலாவதி என்ற நான்கு பிரிவுகளையும் உள்ளடக்கி வெளியிட்டுள்ளார்
.;15 ஆம் நூற்றாண்டில், ஆரியபட்டீய பாஷ்யம் என்ற பெயரில் நீலகண்ட சோமயாஜி என்பவரும் எழுதியுள்ளனர். பாஸ்கராவை சிறப்பிக்கும் வகையில் இரண்டாவது செயற்கைகோளிற்கு பாஸ்கரா என்று பெயரிடப்பட்டது.

இவ்விருவரும் ஜோதிட மற்றும் வானசாஸ்திர நிபுணர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, April 30, 2013

பிரபஞ்ச தோற்றம்.




சூரியன்  சப்தரிஷி மண்டலம் என்றழைக்கப்படும் பால்வெளியை சுற்றி வர 
250 மில்லியன் ஆண்டுகள் ஆகும். இது கேலடிக் வருடம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு ஆதாரமான 

Bigbang என்னும் நிகழ்வு      :61 கேலடிக் வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்தது.
இந்த பால்வெளியின் தோற்றம் :54 கேலடிக் வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்தது. 
சூரியனின் தோற்றம்                    :18.4 கேலடிக் வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்தது
பூமியில் கடல் தோன்றியது      :17 கேலடிக் வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்தது
பூமியில் உயிர்களின் தோற்றம்  :15  கேலடிக் வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்தது
நாகரீக மனிதனின் தோற்றம்   :.001 கேலடிக் வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்தது

ஆதாரம் :galatic year _ விக்கிபீடியா .

Monday, April 29, 2013

கால பரிமாணம்.



தோன்றும் அனைத்து பொருள்களும் தோன்றி நிலைத்து பின்னர் மறைகின்றன. இம்மூன்றும் ஒரு கால எல்லைக்குள் அடங்குகிறது. இந்த கால எல்லைக்குள் நட்சத்திரம் முதற்கொண்டு புல்பூண்டு வரை அடங்கும். ஆறறிவு முதல் அறிவற்ற சடம் வரை இந்த எல்லைக்கு ட்பட்டதே! தோற்றத்திற்கு உட்படும் அனைத்தும் கால எல்லைக்குள் பிரவேசிக்கின்றன! இந்த கால நிர்ணயம் இடத்திற்கு இடம் மாறுபாடு உடையவை!

காலம் எவ்வாறு உருவாகின்றது? 

அண்டவெளியில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு பொருளை அல்லது ஒவ்வொரு பொருளால் ஈர்க்கப்பட்டு சுற்றிவருகிறது. ஒரு முறையான வட்டப்பாதையில்  பலகோடி நட்சத்திரங்கள், சூரியன்கள் , கோள்கள், உபகோள்கள் என ஒன்றை ஒன்று சுற்றிவருகிறது. இவற்றின் சுற்றுப்பாதை மற்றும் சுற்றும் வேகத்தை கொண்டு அங்கே காலத்தின் அளவு நிர்ணயக்கப் படுகிறது. 

காலம் இருவகையாக பகுக்கப்பட்டுள்ளது. ஒன்று சுழற்சி மற்றும் சுற்றுதல் குறித்தது. மற்றொன்று நேர்கோணத்தில் செல்லும் வேகத்தை குறித்தது. இவை ஒளியின் வேகத்தில் அளக்கப்படுகிறது. வெற்றிடத்தில் ஒளி வேகம் விநாடிக்கு 299,792,458 மீட்டர்களாகும்.


ஓர் ஒளி ஆண்டு 3 x 108 x 365 x 24 x 60 x 60 விடை என்ன தெரியுமா? 7.46 மில்லியன் (ஒரு மில்லியன் = 10 லட்சம்) கிலோ மீட்டர் (5.88 மில்லியன் மைல்கள்). இவ்வளவு வேகமாகப் பயணம் செய்யும் ஒளியே, நாம் வாழும் புவியும் சூரியனும் இடம் பெற்றுள்ள பால்வெளி என்கிற விண்மீன் திரளை கடக்க பல ஆயிரம் ஆண்டுகள் பயணம் செய்யவேண்டும். பால் வெளியின் தூரம் சுமார் 1,00,000 ஒளி ஆண்டுகள் ஆகும்.

பால்வெளி மையத்திலிருந்து  சூரியனின் வட்டப்பாதை 30000 ஒளியாண்டுகள் தள்ளி அமைந்திருகிறது.சூரியன் ஒரு நொடிக்கு 220km வேகத்தில் பயணிக்கிறது. சப்தரிஷி மண்டலம் என்றழைக்கப்படும் பால்வெளியை சுற்றிவர 250மில்லியன் ஆண்டுகள் ஆகும். (ஆதாரம்:Morris, Mark. "The Milky Way." The World Book Encyclopedia, 2002, Vol. 13: 551.), 

சூரியனின் சுற்றுவட்டம் 1 காஸ்மிக் வருடம் என்று அழைக்கப்படுகிறது .சூரியன் தன வயதான 500 பில்லியனில் இதுவரை 20 முறை இந்த பால்வெளியை வலம் வந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

உயிர் மற்றும் உயிரற்ற பொருட்களின் மீது கிரங்களின் தாக்கம்!



மனிதனின் உடல் மற்றும் மன (எண்ண) அலைகள் சலனப்படுவதற்க்கும் பூமிக்கு அருகில் உள்ள சந்திரனின் ஈர்ப்பு பெரும் பங்கு வகிப்பதை நாம் அறிவோம்! மேலும் இதன் ஈர்ப்பு சடப்பொருள்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தும். கடல் மற்றும் பாலைவன மணல் ஓதங்களின் மூலம் இதை காணலாம். 



பல்வேறு மிருகம் மற்றும் பறவைகள் கடல்வாழ் உயிரீனங்கள் பல்கி பெருகுவது அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களை ஒட்டி அமைந்திருப்பதை கண்டிருப்பீர்கள். மேலும் தாவரங்களும் செடிகொடிகளும் பருவகாலங்களை ஒட்டி பலன் தருவதையும் அறிவீர்கள். பன்னீரண்டு வருடம் சென்று மலரும் குறிஞ்சியும் இந்த கிரங்களின் சலனத்திலிருந்து தப்புவதில்லை! மனிதன் இயற்கையின் மடியிலிருந்து நழுவிவிட்டான். சந்திரனின் இயக்கங்களின் விளைவுகளை பற்றி பின்னர் விரிவாக காண்போம். 

பிரபஞ்ச பொருட்களின் தொடர்பும் சார்புநிலையும்!



வானவியலும் ஜோதிடமும்! 

கோடிக்கணக்கான நட்சத்திரங்களை உள்ளடக்கிய எண்ணற்ற பிரபஞ்சங்கள் இந்த பேரண்டத்தில் உள்ளது. இதை போன்ற பேரண்டங்களும் கோடிக்கணக்கானவை. ஆனாலும் இவை அனைத்தும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையது மற்றும் சார்புடையது என்பது மறுக்கமுடியாத அறிவியல் உண்மை. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் சூரியனையே ஆதாரமாக கொண்டவை. சூரியன் இல்லை என்றால் இவை இல்லை- ஏன் நாமும் இருக்க வாய்ப்பில்லை.



இந்த சூரியனும் பால்வெளியை மையமாக கொண்டே சுற்றி வருகிறது.வானில் எங்கோ இருக்கும் நட்சத்திரமும் பூமியில் எங்கோ ஒரு புள்ளியில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தொடர்புண்டு (Theory of Relativity and Connection) என்று இன்றைய விஞ்ஞானம் இப்பொழுதுதான் நிருபித்து இருக்கிறது! 

சோதியை இடமாகக் கொண்ட நட்சத்திரமும், சூரியனும், உயிரினங்களும் உயிரற்ற ஜடப்பொருட்களும் அனைத்தும் இணக்கமான தொடர்புடையவை என்பதை தனது மேலான அறிவின் (மெய்யுணர்வு) மூலம் கண்டறிந்தனர் ஆன்றோர்கள். 

அண்டவெளியில் பெரிய பொருள்கள் சிறிய பொருள்களை கவரும். மேலும் தன அருகே உள்ள பொருள்களின் காந்த அலைகளை கவரும் தன்மை உள்ளதாக இருக்கும். இவற்றின் விவரங்களை வரும் பதிவுகளில் காணலாம்.

அலகில் சோதியன்!



உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.


இறைவன் அருட்பெரும் ஜோதி வடிவினன்! 
ஜோதி எல்லயற்றதன்மை உடையது. எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்பது. எல்லாப் பொருளும் காலம் இடம் அளவிற்கு உட்பட்டது. ஆனால் இறைவனோ இம்மூன்றிற்கும் அப்பாற் பட்டவன். எல்லையற்ற தன்மையை எவ்வாறு? எந்த அளவை கொண்டு அறிவது? எல்லையற்ற தன்மையே அதன் உண்மை நிலை என்பதனையே சேக்கிழார் அலகில் சோதியன் என்று குறிப்பிடுகிறார்.

சோதி என்பதற்கு பிரகாசம் என்று பொருள். 
ஒன்றை புலப்படுத்துதல் அல்லது துலங்கச்செய்தல் என்பதே பிரகாசம். தீபம், சூரியன், நட்சத்திரம், சந்திரன், பிராணிகளின் அறிவு இவை அனைத்தும் ஒரு எல்லைக்குட்பட்டு பிரகாசிப்பவை. இவற்றின் பிரகாசத்திற்கு ஆதாரமாக இருப்பதும் அந்த எல்லையற்ற பரம்பொருளே! அடிமுடி காணா ஜோதியனின் திருவடியை சிரமேற்கொண்டு இனி காலச்சக்கரத்தை காண்போம்!

ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.
Related Posts Plugin for WordPress, Blogger...