Tuesday, April 30, 2013

பிரபஞ்ச தோற்றம்.




சூரியன்  சப்தரிஷி மண்டலம் என்றழைக்கப்படும் பால்வெளியை சுற்றி வர 
250 மில்லியன் ஆண்டுகள் ஆகும். இது கேலடிக் வருடம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பிரபஞ்சம் தோன்றுவதற்கு ஆதாரமான 

Bigbang என்னும் நிகழ்வு      :61 கேலடிக் வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்தது.
இந்த பால்வெளியின் தோற்றம் :54 கேலடிக் வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்தது. 
சூரியனின் தோற்றம்                    :18.4 கேலடிக் வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்தது
பூமியில் கடல் தோன்றியது      :17 கேலடிக் வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்தது
பூமியில் உயிர்களின் தோற்றம்  :15  கேலடிக் வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்தது
நாகரீக மனிதனின் தோற்றம்   :.001 கேலடிக் வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்தது

ஆதாரம் :galatic year _ விக்கிபீடியா .

Monday, April 29, 2013

கால பரிமாணம்.



தோன்றும் அனைத்து பொருள்களும் தோன்றி நிலைத்து பின்னர் மறைகின்றன. இம்மூன்றும் ஒரு கால எல்லைக்குள் அடங்குகிறது. இந்த கால எல்லைக்குள் நட்சத்திரம் முதற்கொண்டு புல்பூண்டு வரை அடங்கும். ஆறறிவு முதல் அறிவற்ற சடம் வரை இந்த எல்லைக்கு ட்பட்டதே! தோற்றத்திற்கு உட்படும் அனைத்தும் கால எல்லைக்குள் பிரவேசிக்கின்றன! இந்த கால நிர்ணயம் இடத்திற்கு இடம் மாறுபாடு உடையவை!

காலம் எவ்வாறு உருவாகின்றது? 

அண்டவெளியில் உள்ள ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு பொருளை அல்லது ஒவ்வொரு பொருளால் ஈர்க்கப்பட்டு சுற்றிவருகிறது. ஒரு முறையான வட்டப்பாதையில்  பலகோடி நட்சத்திரங்கள், சூரியன்கள் , கோள்கள், உபகோள்கள் என ஒன்றை ஒன்று சுற்றிவருகிறது. இவற்றின் சுற்றுப்பாதை மற்றும் சுற்றும் வேகத்தை கொண்டு அங்கே காலத்தின் அளவு நிர்ணயக்கப் படுகிறது. 

காலம் இருவகையாக பகுக்கப்பட்டுள்ளது. ஒன்று சுழற்சி மற்றும் சுற்றுதல் குறித்தது. மற்றொன்று நேர்கோணத்தில் செல்லும் வேகத்தை குறித்தது. இவை ஒளியின் வேகத்தில் அளக்கப்படுகிறது. வெற்றிடத்தில் ஒளி வேகம் விநாடிக்கு 299,792,458 மீட்டர்களாகும்.


ஓர் ஒளி ஆண்டு 3 x 108 x 365 x 24 x 60 x 60 விடை என்ன தெரியுமா? 7.46 மில்லியன் (ஒரு மில்லியன் = 10 லட்சம்) கிலோ மீட்டர் (5.88 மில்லியன் மைல்கள்). இவ்வளவு வேகமாகப் பயணம் செய்யும் ஒளியே, நாம் வாழும் புவியும் சூரியனும் இடம் பெற்றுள்ள பால்வெளி என்கிற விண்மீன் திரளை கடக்க பல ஆயிரம் ஆண்டுகள் பயணம் செய்யவேண்டும். பால் வெளியின் தூரம் சுமார் 1,00,000 ஒளி ஆண்டுகள் ஆகும்.

பால்வெளி மையத்திலிருந்து  சூரியனின் வட்டப்பாதை 30000 ஒளியாண்டுகள் தள்ளி அமைந்திருகிறது.சூரியன் ஒரு நொடிக்கு 220km வேகத்தில் பயணிக்கிறது. சப்தரிஷி மண்டலம் என்றழைக்கப்படும் பால்வெளியை சுற்றிவர 250மில்லியன் ஆண்டுகள் ஆகும். (ஆதாரம்:Morris, Mark. "The Milky Way." The World Book Encyclopedia, 2002, Vol. 13: 551.), 

சூரியனின் சுற்றுவட்டம் 1 காஸ்மிக் வருடம் என்று அழைக்கப்படுகிறது .சூரியன் தன வயதான 500 பில்லியனில் இதுவரை 20 முறை இந்த பால்வெளியை வலம் வந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.

உயிர் மற்றும் உயிரற்ற பொருட்களின் மீது கிரங்களின் தாக்கம்!



மனிதனின் உடல் மற்றும் மன (எண்ண) அலைகள் சலனப்படுவதற்க்கும் பூமிக்கு அருகில் உள்ள சந்திரனின் ஈர்ப்பு பெரும் பங்கு வகிப்பதை நாம் அறிவோம்! மேலும் இதன் ஈர்ப்பு சடப்பொருள்கள் மீதும் ஆதிக்கம் செலுத்தும். கடல் மற்றும் பாலைவன மணல் ஓதங்களின் மூலம் இதை காணலாம். 



பல்வேறு மிருகம் மற்றும் பறவைகள் கடல்வாழ் உயிரீனங்கள் பல்கி பெருகுவது அமாவசை மற்றும் பௌர்ணமி நாட்களை ஒட்டி அமைந்திருப்பதை கண்டிருப்பீர்கள். மேலும் தாவரங்களும் செடிகொடிகளும் பருவகாலங்களை ஒட்டி பலன் தருவதையும் அறிவீர்கள். பன்னீரண்டு வருடம் சென்று மலரும் குறிஞ்சியும் இந்த கிரங்களின் சலனத்திலிருந்து தப்புவதில்லை! மனிதன் இயற்கையின் மடியிலிருந்து நழுவிவிட்டான். சந்திரனின் இயக்கங்களின் விளைவுகளை பற்றி பின்னர் விரிவாக காண்போம். 

பிரபஞ்ச பொருட்களின் தொடர்பும் சார்புநிலையும்!



வானவியலும் ஜோதிடமும்! 

கோடிக்கணக்கான நட்சத்திரங்களை உள்ளடக்கிய எண்ணற்ற பிரபஞ்சங்கள் இந்த பேரண்டத்தில் உள்ளது. இதை போன்ற பேரண்டங்களும் கோடிக்கணக்கானவை. ஆனாலும் இவை அனைத்தும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையது மற்றும் சார்புடையது என்பது மறுக்கமுடியாத அறிவியல் உண்மை. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் சூரியனையே ஆதாரமாக கொண்டவை. சூரியன் இல்லை என்றால் இவை இல்லை- ஏன் நாமும் இருக்க வாய்ப்பில்லை.



இந்த சூரியனும் பால்வெளியை மையமாக கொண்டே சுற்றி வருகிறது.வானில் எங்கோ இருக்கும் நட்சத்திரமும் பூமியில் எங்கோ ஒரு புள்ளியில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தொடர்புண்டு (Theory of Relativity and Connection) என்று இன்றைய விஞ்ஞானம் இப்பொழுதுதான் நிருபித்து இருக்கிறது! 

சோதியை இடமாகக் கொண்ட நட்சத்திரமும், சூரியனும், உயிரினங்களும் உயிரற்ற ஜடப்பொருட்களும் அனைத்தும் இணக்கமான தொடர்புடையவை என்பதை தனது மேலான அறிவின் (மெய்யுணர்வு) மூலம் கண்டறிந்தனர் ஆன்றோர்கள். 

அண்டவெளியில் பெரிய பொருள்கள் சிறிய பொருள்களை கவரும். மேலும் தன அருகே உள்ள பொருள்களின் காந்த அலைகளை கவரும் தன்மை உள்ளதாக இருக்கும். இவற்றின் விவரங்களை வரும் பதிவுகளில் காணலாம்.

அலகில் சோதியன்!



உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.


இறைவன் அருட்பெரும் ஜோதி வடிவினன்! 
ஜோதி எல்லயற்றதன்மை உடையது. எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்பது. எல்லாப் பொருளும் காலம் இடம் அளவிற்கு உட்பட்டது. ஆனால் இறைவனோ இம்மூன்றிற்கும் அப்பாற் பட்டவன். எல்லையற்ற தன்மையை எவ்வாறு? எந்த அளவை கொண்டு அறிவது? எல்லையற்ற தன்மையே அதன் உண்மை நிலை என்பதனையே சேக்கிழார் அலகில் சோதியன் என்று குறிப்பிடுகிறார்.

சோதி என்பதற்கு பிரகாசம் என்று பொருள். 
ஒன்றை புலப்படுத்துதல் அல்லது துலங்கச்செய்தல் என்பதே பிரகாசம். தீபம், சூரியன், நட்சத்திரம், சந்திரன், பிராணிகளின் அறிவு இவை அனைத்தும் ஒரு எல்லைக்குட்பட்டு பிரகாசிப்பவை. இவற்றின் பிரகாசத்திற்கு ஆதாரமாக இருப்பதும் அந்த எல்லையற்ற பரம்பொருளே! அடிமுடி காணா ஜோதியனின் திருவடியை சிரமேற்கொண்டு இனி காலச்சக்கரத்தை காண்போம்!

ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.
Related Posts Plugin for WordPress, Blogger...