Showing posts with label நட்சத்திரம். Show all posts
Showing posts with label நட்சத்திரம். Show all posts

Monday, October 7, 2019

தீதுறு நட்சத்திரங்கள்.



தீதுறு நட்சத்திரங்கள் !

"ஆதிரை பரணி கார்த்திகை
ஆயிலிய முப்புரம் கேட்டை
தீதுறு விசாகஞ் சோதி
சித்திரை மகம் மீராரும்
மாதனங்கோண்டார் தாரார்
வழி நடைப்பாட்டார் மீளார்
பாய்தனில் படுத்தார் தேறார்
பாம்பின் வாய் தேரை தானே"

தனம் கடனாக கொண்ட பேர்கள் அதாவது பொருளை கடனாக பெற்றவர்கள் அதனை திருப்பி தர மாட்டார்கள் எனவும் பயம் மேற்கொண்டோர் திரும்ப மாட்டார்கள் எனவும் நோய் என பாய்தனில் படுத்தவர் தேரர் மாட்டார் எனவும் மேலும் இது பாம்பின் வாய் சிக்கிய தேரை மீள்வதை போன்றதாகும் என் இந்த பாடலின் வரிகள் அமைந்துள்ளது.உங்களின் அனுபவத்தை கொண்டு நிச்சயிக்கவும்.

சுப முகூர்த்தங்களுக்கு நிஷித்தம் ( தீதுறு ) என இந்த பன்னிரண்டு நட்சத்திரங்களை குறிப்பிடுகிறார்கள்.


1.ஆதிரை,( திருவாதிரை )
2.பரணி,
3.கிருத்திகை,
4.ஆயில்யம்,
5.பூரம்
6.பூராடம்
7.பூரட்டாதி
8.கேட்டை
9.விசாகம்
10.சித்திரை
11.மகம்

இதில் பரணி, கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், பூராடம், பூரட்டாதி ஆகிய எட்டு நட்சத்திரங்கள், (அதோமுக நட்சத்திரங்கள், அதாவது, கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.

திருவாதிரை மேல்நோக்கு நட்சத்திரமாகும்

சித்திரை சுவாதி கேட்டை மூன்றும் சம நோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.

Monday, December 29, 2014

தாரை தோஷ நிவர்த்தி


தாரை தோஷ நிவர்த்தி 

உத்தர த்ரய ஹஸ்தேஷு ஸ்வாதி ஸெம்யாநு ராதயோ:
விபத்ப்ரத்யரதோஷஸ்ச வததோஷோ ந வித்யதே!
பொருள்: உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, ஹஸ்தம், ஸ்வாதி, மிருகசீர்ஷம், அனுஷம் இந்த நக்ஷத்திரங்களுக்கு விபத்தாரை, பிரத்யக் தாரை, வதை தாரை தோஷமில்லை.

Saturday, December 27, 2014

நக்ஷ்சத்திரம் - பத அர்த்தம் !

நக்ஷ்சத்திரம்



நக்ஷ்க்ஷேத்திர  என்பதை "நக்ஷ்" என்றும் "க்ஷேத்திரம்" என்றும் இரண்டு சொற்களாக பிரிக்கலாம். "நக்ஷ்" என்றால் "ஆகாயம்" என்றும்  "க்ஷேத்திரம்" என்றால் இடம்" என்றும்  பொருள்படும். எனவே நக்ஷ்க்ஷேத்திர என்றால் ஆகாயத்தில் ஒரு இடம் எனப்பொருள்படும். இதுவே மருவி நக்ஷ்சத்திரம் என்றழைக்கப்படுகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...