Showing posts with label திதி. Show all posts
Showing posts with label திதி. Show all posts

Thursday, September 5, 2019

அபரான்னம்.

பிதிர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம்.




பகல் பொழுதை  ஐந்து பாகமாக பிரித்து அதில்  நான்காம் பாகத்தில் உள்ள கால அளவே அபரான்னம் எனப்படும்  அபரான்னமே பிதிர்களுக்கு உகந்த காலமாகும். சிராத்த திதி இரண்டு நாட்களிலும் இருந்தால் அபரான்ன காலத்தில் திதி அதிகமாக உள்ள அன்றுதான் சிராத்த திதி கடைபிடிக்க வேண்டும்.

இந்த அபரான்ன காலத்தில்தான் பித்ருக்கள்  நாம் அளிக்கும் எள்ளும் தண்ணீரையும் உணவாக அருந்தி நம்மை ஆசீர்வதிக்க வருவார்கள். குதப காலத்திலும் தொடர்பு இருப்பின் இன்னும் விசேஷமாகும்  என்கிறது கதிவிலோசனம் எனும் பழமையான சாஸ்திர நூல்.

குதப காலம் என்பது பகல் பொழுதை பதினைந்து பாகமாக பிரித்து அதில் எட்டாவது பாகமே குதப்ப காலமாகும் . பகல் பொழுது  தோராயமாக 30 நாழிகை அல்லது 12 மணி நேரம் எனில் 12  / 15 = 48 நிமிடம் அல்லது இரண்டு நாழிகை அளவு ஆகும்.

காலை சூரிய உதயத்திலிருந்து கணக்கிட ஏழாவது பாகத்திலிருந்து குதப கால தொடக்கம்.48 x 7 = 336 நிமிடங்கள் 5 மணி 36 நிமிடங்கள் . காலை சூரிய உதயம் 6 மணி எனில் 6 + 5.36
= 11.36 மணி முதல் 12.24 மதியம் வரை குதப காலமாகும். சிராத்ததிற்கு இந்த குதப காலம் ஆன 11 மணி 36 நிமிடத்திலிருந்து 12 மணி 24 நிமிடம் வரை  கருப்பு எள்ளும் பெண் வயிற்று பிள்ளையும் சிறந்தது.

Saturday, December 12, 2015

திதிகளின் தெய்வங்கள் !



திதிகளின் தெய்வங்கள் !

சுக்லபட்சம்

1. பிரதமை –  குபேரன் மற்றும் பிரம்மா
2. துவதியை – பிரம்மா 
3. திரிதியை – சிவன் மற்றும் கெளரி மாதா
4. சதுர்த்தி –  எமன் மற்றும் விநாயகர் 
5. பஞ்சமி – திரிபுர சுந்தரி
6. ஷஷ்டி – செவ்வாய்
7. ஸப்தமி – ரிஷி மற்றும் இந்திரன் 
8. அஷ்டமி –  காலபைரவர்
9. நவமி –  சரஸ்வதி 
10. தசமி – வீரபத்ரர் மற்றும் தர்மராஜன் 
11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி – மகா விஷ்ணு 
13. திரயோதசி – மன்மதன் 
14. சதுர்த்தசி –  காளி
15. பவுர்ணமி – லலிதாம்பிகை 


கிருஷ்ணபட்சம்

1. பிரதமை –  துர்க்கை
2. துவதியை – வாயு 
3. திரிதியை – akni
4. சதுர்த்தி –  எமன் மற்றும் விநாயகர் 
5. பஞ்சமி – நாகதேவதை 
6. ஷஷ்டி – முருகன் 
7. ஸப்தமி – சூரியன் 
8. அஷ்டமி –  மஹாருத்ரன் மற்றும் துர்க்கை
9. நவமி –  சரஸ்வதி 
10. தசமி – எமன் மற்றும் துர்கை 
11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி – சுக்ரன்
13. திரயோதசி – நந்தி
14. சதுர்த்தசி –  ருத்ரர் 
15..அமாவாசை - பித்ருக்கள் மற்றும் காளி 

திதி நித்யா தேவதைகள்.



திதி நித்யா தேவதைகள்.

நித்யா என்றால் என்றும் இருப்பவள் என்று அர்த்தம். இவர்கள் மொத்தம் பதினைந்து பேர். தேவியின் அம்ருத கலைகள் பதினைந்து பாகங்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று, பதினைந்து நித்யா தேவிகளாக த்ரிகோணத்தைச் சுற்றி, பக்கத்துக்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர்.


திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் திதி நித்யா தேவதைகள்.

ஸ்ரீசக்ர நாயகியான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் முறையே ஸ்ரீவித்யை. அந்த ஸ்ரீவித்யையில் அம்பிகையை ஆராதிக்கும்போது, அவள் பிந்து மத்ய வாசினி என்பதற்கிணங்க, ஸ்ரீசக்ரத்தின் நடுவில் காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றி ஒரு முக்கோணம் இருக்கிறது. அந்த முக்கோணத்தில் வீற்றிருப்பவர்களே திதி நித்யா தேவிகள்.




அவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதம்பிகையுடன் ஸ்ரீசக்ரம் வைத்து (ஒரு வருடம்) மூல மந்திரம் சொல்லி வணங்கி,திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

1. பிரதமை – ஸ்ரீ காமேஸ்வரி நித்யா
2. துவதியை –பகமாலினி நித்யா 
3. திரிதியை – நித்யக்லின்னை நித்யா
4. சதுர்த்தி – பேருண்டா நித்யா
5. பஞ்சமி – வந்நிவாசினி நித்யா
6. ஷஷ்டி – மஹாவஜ்ரேஸ்வரி நித்யா
7. ஸப்தமி – சிவதூதி நித்யா
8. அஷ்டமி – த்வரிதா நித்யா
9. நவமி – குலசுந்தரி நித்யா
10. தசமி – நித்ய நித்யா
11. ஏகாதசி – நீலபதாகா நித்யா
12. துவாதசி – விஜயா நித்யா
13. திரயோதசி – ஸர்வமங்களா நித்யா
14. சதுர்த்தசி – ஜ்வாலாமாலினி நித்யா
15. பவுர்ணமி – சித்ராதேவி நித்யா



அன்னையின் காலவடிவே இந்த நித்யா தேவிகள். ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான 15 நாட்களுக்கும், சந்திரகலை வளர்கிறது.ஒவ்வொரு சந்திர கலைக்கும் திதிகளுக்கும் அதிஷ்டான தேவதைகளாக பதினைந்து நித்யா தேவிகள் விளங்குகிறார்கள். காமேச்வரி முதல் சித்ரா வரையிலான பதினைந்து நித்யா தேவிகளும் அன்னையைச் சுற்றியே எப்போதும் காணப்படுபவர்கள். இவர்களே ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான சந்திரகலையின் வடிவம். மகா நித்யாவாக அம்பிகையே வீற்றிருக்கிறாள்.

திதிகளின் வகைகள் !



திதிகளின் வகைகள்
!

நந்த திதிகள் = பிரதமை, சஷ்டி, ஏகாதசி 
பத்ர திதிகள் = திவிதியை, சப்தமி, துவாதசி 
ஜெய திதிகள் = திருதியை, அஷ்டமி, திரியோதசி
ரிக்த திதிகள் = சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி
பூர்ண திதிகள் = பஞ்சமி, தசமி, பௌர்ணமி 

நந்த திதிகள் = மகிழ்ச்சியும், களிப்பும் அளிப்பவை !
பத்ர திதிகள் = அனைத்து செயல்களும் தொடங்க ஏற்றவை !
ஜெய திதிகள் = எதிரிகளை வெல்ல !
ரிக்த திதிகள் = தடைகளையும் துக்கத்தையும் அளிப்பவை !
பூர்ண திதிகள் = அனைத்து விசயங்களையும் பூர்த்தி செய்ய ஏற்றவை !

பக்ஷச்சித்திரை = வளர்பிறை மற்றும் தேய்பிறைகளில் வரும் சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, துவாதசி, சதுர்த்தசி ஆகிய ஐந்தும்  பக்ஷச்சித்திரை ஆகும்.

தக்த யோகத் திதிகள் !
துவாதசி திதியும் ஞாயிற்று கிழமையும் 
ஏகாதசி திதியும் திங்கட் கிழமையும் 
பஞ்சமி திதியும் செவ்வாய் கிழமையும் 
திவிதியை  திதியும் புதன் கிழமையும் 
சஷ்டி திதியும் வியாழக் கிழமையும்
அஷ்டமி திதியும் வெள்ளி கிழமையும்  
நவமி திதியும் சனிக் கிழமையும்  வந்தால் தக்த யோக திதிகளாகும்.

திதிகள்



நமது பஞ்சாங்க கணிதத்தில் முக்கிய பங்கு சந்திர சித்தாந்த கணிதத்தை கொண்டே கணிக்கப்படுகிறது. வாரம், திதி, நட்சத்திரம், யோகம் கரணம் ஆகிய பஞ்ச அங்கத்தில் வாரத்தை தவிர்த்து மற்ற நான்கும் சந்திரனின் நிலையை கொண்டே அறியப்படுகிறது. பஞ்ச அங்கங்களுள் முக்கியமான ஒன்று திதி என்பதாகும். 

விண்வெளியில் சந்திரன் சென்று கொண்டிருக்கும்  நிலைக்கும் சூரியன் சென்று கொண்டிருக்கும் நிலைக்கும் இடையில் ஏற்படும் தூரத்தின் அளவே திதிகளாக கணக்கிடப்படுகின்றன. திகைதி என்ற சொல்லின் திரிபே திகதி என்றும் திதி என்றும் பின்னர்  தேதி என்றும் மருவியது.

இந்த திதிகள் மொத்தம் முப்பது ஆகும். இவை வளர்பிறை திதிகள் பதினைந்தாகவும் தேய்பிறை திதிகள் பதினைந்தாகவும் ஆக முப்பது திதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் முப்பது நாட்கள் கொண்ட மாதம் இரண்டு பட்சங்களாக பிரிக்கப்படுகிறது. அவை சுக்லபட்சம் என்னும் வளர்பிறை திதிகளும்,  அமரபட்சம் அல்லது கிருஷ்ணபட்சம் என்னும் தேய்பிறை திதிகளும் கொண்டவை.

360 பாகைகள் கொண்ட வான மண்டலத்தில் ஒரு திதியின் அளவை கணக்கிட வேண்டுமென்றால் 360° பாகையை 30° ஆல் வகுக்க 12° பாகை வரும்.இதுவே
திதியின் அளவாகும்.

சுக்ல என்னும் சம்ஸ்கிருத சொல்லிற்கு வெண்மை என்று பொருள். சூரியனும் சந்திரனும் ஒன்றாக சேர்த்திருக்கும் 0 பாகையான அமாவாசையிலிருந்து வளரும் திதிகளுக்கு சுக்ல பட்ச திதிகள் என்று பெயர். வளர்பிறை பிரதமை முதல் பௌர்ணமி வரையுள்ள பதினைந்து திதிகளும் சுக்லபட்ச திதிகளாகும்.


கிருஷ்ண  என்னும் சம்ஸ்கிருத சொல்லிற்கு கருமை என்று பொருள். கண்ணின் கருவிழிக்கு (கிருஷ்ண படலம் என்றும் கரும் கூந்தலுக்கு கிருஷ்ணவேணி என்றும்  பெயர்.) சூரியனுக்கு எதிரே பாகையில் சந்திரன் இருப்பது பௌர்ணமி ஆகும். தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரையுள்ள பதினைந்து திதிகளும் கிருஷ்ணபட்ச திதிகளாகும்.

வளர்பிறை காலம் ( சுக்லபட்சம் )

0  முதல் 12 பாகை வரை பிரதமை திதி ( முதல் நாள் ).
12 முதல் 24 பாகை வரை துவிதியை திதி ( இரண்டாம் நாள் )
24 முதல் 36 பாகை வரை திருதியை திதி ( மூன்றாம் நாள் )
36 முதல் 48 பாகை வரை சதுர்த்தி  திதி ( நான்காம் நாள் )
48 முதல் 60 பாகை வரை பஞ்சமி திதி ( ஐந்தாம் நாள் )
60 முதல் 72 பாகை வரை சஷ்டி திதி ( ஆறாம் நாள் )
72 முதல் 84 பாகை வரை சப்தமி திதி ( ஏழாம் நாள் )
84 முதல் 96 பாகை வரை அஷ்டமி திதி ( எட்டாம் நாள் )
96 முதல் 108 பாகை வரை நவமி திதி ( ஒன்பதாம்  நாள் )
108 முதல் 120 பாகை வரை தசமி திதி ( பத்தாம் நாள் )
120 முதல் 132 பாகை வரை ஏகாதசி திதி ( பதினோராம் நாள் )
132 முதல் 144 பாகை வரை துவாதசி திதி ( பன்னிரெண்டாம் நாள் )
144 முதல் 156 பாகை வரை திரியோதசி திதி ( பதிமூன்றாம் நாள் )
156 முதல் 168 பாகை வரை சதுர்த்தசி திதி ( பதிநான்காம் நாள் )
168 முதல் 180 பாகை வரை பௌர்ணமி  ( பதினைந்தாம் நாள் )
சூரியனுக்கு நேர் எதிர் பாகையில் நிலவு முழுமையாக பிரகாசிக்கும் நாள்.
அதன் பிறகு தேய்மானம் ஒவ்வொரு 12 பாகைக்கும் தொடர்ந்து 15-ந்தாம் நாள் 
ஏக பாகையில் சூரியனும் சந்திரனும் இணைவது அமாவாசையாகும்.

தேய்பிறை காலம் ( கிருஷ்ணபட்சம்,அமரபட்சம் )


180  முதல் 192 பாகை வரை பிரதமை திதி ( முதல் நாள் ).

192 முதல் 202 பாகை வரை துவிதியை திதி ( இரண்டாம் நாள் )
202 முதல் 214 பாகை வரை திருதியை திதி ( மூன்றாம் நாள் )
214 முதல் 226 பாகை வரை சதுர்த்தி  திதி ( நான்காம் நாள் )
226 முதல் 238 பாகை வரை பஞ்சமி திதி ( ஐந்தாம் நாள் )
238 முதல் 250 பாகை வரை சஷ்டி திதி ( ஆறாம் நாள் )
250 முதல் 262 பாகை வரை சப்தமி திதி ( ஏழாம் நாள் )
262 முதல் 274 பாகை வரை அஷ்டமி திதி ( எட்டாம் நாள் )
274 முதல் 286 பாகை வரை நவமி திதி ( ஒன்பதாம்  நாள் )
286 முதல் 298 பாகை வரை தசமி திதி ( பத்தாம் நாள் )
298 முதல் 310 பாகை வரை ஏகாதசி திதி ( பதினோராம் நாள் )
310 முதல் 322 பாகை வரை துவாதசி திதி ( பன்னிரெண்டாம் நாள் )
322 முதல் 336 பாகை வரை திரியோதசி திதி ( பதிமூன்றாம் நாள் )
336 முதல் 348 பாகை வரை சதுர்த்தசி திதி ( பதிநான்காம் நாள் )
348 முதல் 360 பாகை வரை அமாவாசை ( பதினைந்தாம் நாள் )


Related Posts Plugin for WordPress, Blogger...