Showing posts with label வித்தை. Show all posts
Showing posts with label வித்தை. Show all posts

Thursday, December 17, 2015

வாக்கு ஸ்தானமும் வித்தையும்




வாக்கு ஸ்தானமும் வித்தையும் !

இலக்கினத்திரண்டில் குருவிருந்தால் வேத சாஸ்திரங்கற்பான்.
                 இதமுடனே புதனிருந்தால் தமிழில் வல்லோனாம் 
தெலுங்கு கன்னடங்கற்பான் சனிசெவ்வாய் நிற்கில் 
                 தெளிவாக ராகுகேது இரண்டோனும் சேர்ந்தால் 
பலவிதமாயன்னிய பாஷை முதலாயுள்ள 
                 பலபாஷை நீஷபாஷை யெல்லாம் கற்று 
நலமுடனே சமர்த்தாய் விளங்கியிந்த 
                 ஞாலமதில் கீர்த்தியுடனிருப்பான் தானே !        ~ ஜம்பு மகரிஷி வாக்கியம் 


வாக்கு ஸ்தானத்தில் 

குரு இருக்க வேத சாஸ்திரங்களை கற்றுணர்வார்கள்.
புதன் இருக்க தமிழில் பாண்டித்தியம் பெற்று கீர்த்தி பெறுவார்கள்
சனியும் செவ்வாயும் நிற்க தெலுங்கு கன்னட பாஷை கற்றுணர்வார்கள்.
வாக்கு ஸ்தானாதிபதியும் ராகு கேது சேர்ந்திருந்தால் அந்நிய பாஷை நிஷா பாஷை முதலான பலவிதமான பாஷைகளையும் சாதகர் கற்றுணர்ந்து சிறப்பு பெறுவார்கள்.
Related Posts Plugin for WordPress, Blogger...