Saturday, December 12, 2015

திதிகள்



நமது பஞ்சாங்க கணிதத்தில் முக்கிய பங்கு சந்திர சித்தாந்த கணிதத்தை கொண்டே கணிக்கப்படுகிறது. வாரம், திதி, நட்சத்திரம், யோகம் கரணம் ஆகிய பஞ்ச அங்கத்தில் வாரத்தை தவிர்த்து மற்ற நான்கும் சந்திரனின் நிலையை கொண்டே அறியப்படுகிறது. பஞ்ச அங்கங்களுள் முக்கியமான ஒன்று திதி என்பதாகும். 

விண்வெளியில் சந்திரன் சென்று கொண்டிருக்கும்  நிலைக்கும் சூரியன் சென்று கொண்டிருக்கும் நிலைக்கும் இடையில் ஏற்படும் தூரத்தின் அளவே திதிகளாக கணக்கிடப்படுகின்றன. திகைதி என்ற சொல்லின் திரிபே திகதி என்றும் திதி என்றும் பின்னர்  தேதி என்றும் மருவியது.

இந்த திதிகள் மொத்தம் முப்பது ஆகும். இவை வளர்பிறை திதிகள் பதினைந்தாகவும் தேய்பிறை திதிகள் பதினைந்தாகவும் ஆக முப்பது திதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் முப்பது நாட்கள் கொண்ட மாதம் இரண்டு பட்சங்களாக பிரிக்கப்படுகிறது. அவை சுக்லபட்சம் என்னும் வளர்பிறை திதிகளும்,  அமரபட்சம் அல்லது கிருஷ்ணபட்சம் என்னும் தேய்பிறை திதிகளும் கொண்டவை.

360 பாகைகள் கொண்ட வான மண்டலத்தில் ஒரு திதியின் அளவை கணக்கிட வேண்டுமென்றால் 360° பாகையை 30° ஆல் வகுக்க 12° பாகை வரும்.இதுவே
திதியின் அளவாகும்.

சுக்ல என்னும் சம்ஸ்கிருத சொல்லிற்கு வெண்மை என்று பொருள். சூரியனும் சந்திரனும் ஒன்றாக சேர்த்திருக்கும் 0 பாகையான அமாவாசையிலிருந்து வளரும் திதிகளுக்கு சுக்ல பட்ச திதிகள் என்று பெயர். வளர்பிறை பிரதமை முதல் பௌர்ணமி வரையுள்ள பதினைந்து திதிகளும் சுக்லபட்ச திதிகளாகும்.


கிருஷ்ண  என்னும் சம்ஸ்கிருத சொல்லிற்கு கருமை என்று பொருள். கண்ணின் கருவிழிக்கு (கிருஷ்ண படலம் என்றும் கரும் கூந்தலுக்கு கிருஷ்ணவேணி என்றும்  பெயர்.) சூரியனுக்கு எதிரே பாகையில் சந்திரன் இருப்பது பௌர்ணமி ஆகும். தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரையுள்ள பதினைந்து திதிகளும் கிருஷ்ணபட்ச திதிகளாகும்.

வளர்பிறை காலம் ( சுக்லபட்சம் )

0  முதல் 12 பாகை வரை பிரதமை திதி ( முதல் நாள் ).
12 முதல் 24 பாகை வரை துவிதியை திதி ( இரண்டாம் நாள் )
24 முதல் 36 பாகை வரை திருதியை திதி ( மூன்றாம் நாள் )
36 முதல் 48 பாகை வரை சதுர்த்தி  திதி ( நான்காம் நாள் )
48 முதல் 60 பாகை வரை பஞ்சமி திதி ( ஐந்தாம் நாள் )
60 முதல் 72 பாகை வரை சஷ்டி திதி ( ஆறாம் நாள் )
72 முதல் 84 பாகை வரை சப்தமி திதி ( ஏழாம் நாள் )
84 முதல் 96 பாகை வரை அஷ்டமி திதி ( எட்டாம் நாள் )
96 முதல் 108 பாகை வரை நவமி திதி ( ஒன்பதாம்  நாள் )
108 முதல் 120 பாகை வரை தசமி திதி ( பத்தாம் நாள் )
120 முதல் 132 பாகை வரை ஏகாதசி திதி ( பதினோராம் நாள் )
132 முதல் 144 பாகை வரை துவாதசி திதி ( பன்னிரெண்டாம் நாள் )
144 முதல் 156 பாகை வரை திரியோதசி திதி ( பதிமூன்றாம் நாள் )
156 முதல் 168 பாகை வரை சதுர்த்தசி திதி ( பதிநான்காம் நாள் )
168 முதல் 180 பாகை வரை பௌர்ணமி  ( பதினைந்தாம் நாள் )
சூரியனுக்கு நேர் எதிர் பாகையில் நிலவு முழுமையாக பிரகாசிக்கும் நாள்.
அதன் பிறகு தேய்மானம் ஒவ்வொரு 12 பாகைக்கும் தொடர்ந்து 15-ந்தாம் நாள் 
ஏக பாகையில் சூரியனும் சந்திரனும் இணைவது அமாவாசையாகும்.

தேய்பிறை காலம் ( கிருஷ்ணபட்சம்,அமரபட்சம் )


180  முதல் 192 பாகை வரை பிரதமை திதி ( முதல் நாள் ).

192 முதல் 202 பாகை வரை துவிதியை திதி ( இரண்டாம் நாள் )
202 முதல் 214 பாகை வரை திருதியை திதி ( மூன்றாம் நாள் )
214 முதல் 226 பாகை வரை சதுர்த்தி  திதி ( நான்காம் நாள் )
226 முதல் 238 பாகை வரை பஞ்சமி திதி ( ஐந்தாம் நாள் )
238 முதல் 250 பாகை வரை சஷ்டி திதி ( ஆறாம் நாள் )
250 முதல் 262 பாகை வரை சப்தமி திதி ( ஏழாம் நாள் )
262 முதல் 274 பாகை வரை அஷ்டமி திதி ( எட்டாம் நாள் )
274 முதல் 286 பாகை வரை நவமி திதி ( ஒன்பதாம்  நாள் )
286 முதல் 298 பாகை வரை தசமி திதி ( பத்தாம் நாள் )
298 முதல் 310 பாகை வரை ஏகாதசி திதி ( பதினோராம் நாள் )
310 முதல் 322 பாகை வரை துவாதசி திதி ( பன்னிரெண்டாம் நாள் )
322 முதல் 336 பாகை வரை திரியோதசி திதி ( பதிமூன்றாம் நாள் )
336 முதல் 348 பாகை வரை சதுர்த்தசி திதி ( பதிநான்காம் நாள் )
348 முதல் 360 பாகை வரை அமாவாசை ( பதினைந்தாம் நாள் )


Monday, December 29, 2014

தாரை தோஷ நிவர்த்தி


தாரை தோஷ நிவர்த்தி 

உத்தர த்ரய ஹஸ்தேஷு ஸ்வாதி ஸெம்யாநு ராதயோ:
விபத்ப்ரத்யரதோஷஸ்ச வததோஷோ ந வித்யதே!
பொருள்: உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, ஹஸ்தம், ஸ்வாதி, மிருகசீர்ஷம், அனுஷம் இந்த நக்ஷத்திரங்களுக்கு விபத்தாரை, பிரத்யக் தாரை, வதை தாரை தோஷமில்லை.

தர்மமும் ! அதர்மமும் !



தர்மமும் ! அதர்மமும் !

தர்மம் அதர்மம் இவ்விரண்டும்" நான் தர்மம்", " நான் அதர்மம்" என்று கூறிக்கொண்டு திரிவதில்லை.தேவர்கள், கந்தர்வர்கள், பித்ருக்கள் இவர்களும் கூட இது தர்மம் இது அதர்மம் என்று நேரில் சொருபத்தை காட்டி சொல்ல முடியாது.பெரியவர்கள் எந்த கார்யத்தை புகழ்கிறார்களோ அது தர்மம். எதை இகழ்கிறார்களோ அது அதர்மம் என்று அறிக!

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.!


மனிதனுக்கு ஒழுக்கம் இன்றியமையாதது! 

ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்துபவன் யாராயினும் அவன் மேன்மையுறுவான். உடல்தூய்மை, மனத்தூய்மை, ஆகார நியமம் மற்றும் ப்ரம்மசர்யம் ஆகிய நியமங்களே ஒழுக்கம் எனப்படும். இது எல்லா தர்மங்களுக்கும் அங்கமாகும்.

ஒழுக்கம் இல்லாத தர்மம் பலத்தை கொடுப்பது இல்லை. வேதம் இறைபக்தி இவை ஒழுக்கம் தவறியவனை காப்பாற்றாது! மேலும் புனித தலங்களுக்கு செல்வது புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது ஹோம யாகங்கள் அனுஷ்டிப்பது இவைகளும் ஒழுக்கம் விட்டவனை பாதுகாக்காது.

தானத்தின் பலன்கள்


தானத்தின் பலன்கள்

ஜலத்தை அளிப்பவன் திருப்தியையும்
அன்னத்தை அளிப்பவன் குறைவில்லா சுகத்தையும்
எள்ளு அளிப்பவன் நல்ல சந்ததியையும்
தீபம் கொடுப்பவன் நல்ல கண்ணையும்
பூமியை அளிப்பவன் பூமியையும்
தங்கம் அளிப்பவன் தீர்கமான ஆயுளையும்
வீடு அளிப்பவன் உயர்ந்த மாளிகைகளையும்
வெள்ளி அளிப்பவன் அம்சமான ரூபத்தையும்
வேஷ்டி அளிப்பவன் சந்திர லோகத்தையும்
காளையை அளிப்பவன் அகண்ட ஐஸ்வரீயத்தையும்
வண்டி அளிப்பவன் அழகான பத்தினியையும்
அபய தானம் அளிப்பவன் தனத்தையும்
தான்யம் அளிப்பவன் நிலையான சௌக்கியத்தையும்
வேத தானம் ( ஞானத்தை ) அளிப்பவன் பிரம்மலோகத்தையும் அடைவான்.
எல்லா தானத்தை காட்டிலும் வேததானம் உயர்வானது!
தானத்தை யாருக்கும் செய்யலாம். ஆனால் இடமும் காலமும் பாத்திரமும் அனுசரித்து அளித்தால் பலன் அதிகம்.

இட்டார் பெரியார் !
இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி !

யுக தர்மங்கள் !




யுக தர்மங்கள் !

க்ருதயுகத்தில் தபஸ் விஷேச தர்மமாகும்.
த்ரேதாயுகத்தில் ஞானம் விஷேச தர்மமாகும்.
த்வாபரயுகத்தில் யக்ஞம் விஷேச தர்மமாகும்.
கலியுகத்தில் தானம் விஷேச தர்மமாகும்.

எல்லா யுகத்திலும் நான்கு தர்மங்களும் உண்டு. இருப்பினும் அந்தந்த யுகத்திற்கு அந்தந்த தர்மம் உன்னத பலனை அளிக்கும்.

Saturday, December 27, 2014

நக்ஷ்சத்திரம் - பத அர்த்தம் !

நக்ஷ்சத்திரம்



நக்ஷ்க்ஷேத்திர  என்பதை "நக்ஷ்" என்றும் "க்ஷேத்திரம்" என்றும் இரண்டு சொற்களாக பிரிக்கலாம். "நக்ஷ்" என்றால் "ஆகாயம்" என்றும்  "க்ஷேத்திரம்" என்றால் இடம்" என்றும்  பொருள்படும். எனவே நக்ஷ்க்ஷேத்திர என்றால் ஆகாயத்தில் ஒரு இடம் எனப்பொருள்படும். இதுவே மருவி நக்ஷ்சத்திரம் என்றழைக்கப்படுகிறது.
Related Posts Plugin for WordPress, Blogger...