Wednesday, October 30, 2019

நைசர்க்கிக தசை


நைசர்க்கிக தசை 

ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்படும்  சந்தோஷமான, துக்க கரமான நிகழ்ச்சிகள் எப்போது வரும் என்பதைக் கண்டுபிடிக்க பலவகையான கிரக தசைகளைச் சொல்லியிருக்கின்றார்கள். விம்சோத்திரி தசை, பிண்ட தசை, நைசர்க்கிக தசை, அம்ச தசை, காலச்சக்கர தசை, ஜைமினி சூத்திரத்தின் படியான சர ராசி தசை, ஸ்திர தசை, திரிகோண தசை என பல வகைகள் உள்ளன . அவற்றில் நைசர்க்கிக தசை என்ன என்பதை இங்கே காண்போம்.

வராகமிகிரரின் பிருஹஜ் ஜாதகத்தில் நைசர்க்கிக தசை கணிப்பது குறித்து ஒரு இலகுவான வழியும் கொடுத்திருக்கிறார். அதாவது  ஒருவனின் வாழ்க்கையில்

முதல் ஒரு வருடம் சந்திர தசையும்

பின் இரண்டு வருடங்கள் செவ்வாய் தசையும்

பின்னர் ஒன்பது வருடங்கள் புதன் தசையும்

அடுத்து இருபது வருடங்கள் சுக்கிர தசையும் நடக்கும். ( 13 -32 )

33 முதல் 50 வயது முடிய குரு தசையும்

51 முதல் 70 முடிய சூர்ய தசையும்

எழுபதுக்கு மேல் மரணம் வரைக்கும் சனி தசையும் நடக்கும்
என்று சொல்லியிருக்கிறார்.

இது நைசர்க்கிக தசை அதாவது இயற்கையான தசை என்று அழைக்கப்படுகிறது.

Monday, October 7, 2019

தீதுறு நட்சத்திரங்கள்.



தீதுறு நட்சத்திரங்கள் !

"ஆதிரை பரணி கார்த்திகை
ஆயிலிய முப்புரம் கேட்டை
தீதுறு விசாகஞ் சோதி
சித்திரை மகம் மீராரும்
மாதனங்கோண்டார் தாரார்
வழி நடைப்பாட்டார் மீளார்
பாய்தனில் படுத்தார் தேறார்
பாம்பின் வாய் தேரை தானே"

தனம் கடனாக கொண்ட பேர்கள் அதாவது பொருளை கடனாக பெற்றவர்கள் அதனை திருப்பி தர மாட்டார்கள் எனவும் பயம் மேற்கொண்டோர் திரும்ப மாட்டார்கள் எனவும் நோய் என பாய்தனில் படுத்தவர் தேரர் மாட்டார் எனவும் மேலும் இது பாம்பின் வாய் சிக்கிய தேரை மீள்வதை போன்றதாகும் என் இந்த பாடலின் வரிகள் அமைந்துள்ளது.உங்களின் அனுபவத்தை கொண்டு நிச்சயிக்கவும்.

சுப முகூர்த்தங்களுக்கு நிஷித்தம் ( தீதுறு ) என இந்த பன்னிரண்டு நட்சத்திரங்களை குறிப்பிடுகிறார்கள்.


1.ஆதிரை,( திருவாதிரை )
2.பரணி,
3.கிருத்திகை,
4.ஆயில்யம்,
5.பூரம்
6.பூராடம்
7.பூரட்டாதி
8.கேட்டை
9.விசாகம்
10.சித்திரை
11.மகம்

இதில் பரணி, கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், பூராடம், பூரட்டாதி ஆகிய எட்டு நட்சத்திரங்கள், (அதோமுக நட்சத்திரங்கள், அதாவது, கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.

திருவாதிரை மேல்நோக்கு நட்சத்திரமாகும்

சித்திரை சுவாதி கேட்டை மூன்றும் சம நோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.

சுப நிகழ்விற்க்கு தவிர்க்க வேண்டிய மாதங்கள்.



விஷ மாதங்கள் - மல மாதங்கள்

எந்த மாதத்தில் பௌர்ணமியும் அமாவாசையும் ஏற்படவில்லையோ அந்த மாதம் விஷ மாதமாகும்.

எந்த மாதத்தில் இரண்டு பௌர்ணமியும் இரண்டு அமாவாசையும் ஏற்படுகிறதோ அந்த மாதம் மல மாதமாகும்.

விஷ மாதத்திலும் மலமாதத்திலும் சுப நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். 

ஆனால் சித்திரை , வைகாசி மாதங்கள் இதற்கு விதிவிலக்காகும். இந்த தோஷம் இந்த மாதங்களுக்கு இல்லை.


கசர யோகம்



எந்த ஒரு சுப நிகழ்வுகளுக்கும் கசர  யோகத்தை விலக்கிய சுபமுகூர்த்த காலத்தை நிச்சயிக்க வேண்டும். கரச யோகமுள்ள தினங்களை கண்டிப்பாக விலக்கியே ஆகவேண்டும்.

அப்படி செய்தால் திருமணத்தில் மணப்பெண்ணிற்கு ஆயுள் குறைவோ அமங்கலமோ ஏற்படும். உபநயனத்தில் பூணுல் இழத்தலும், சீமந்தத்தில் சிசு நாசமும் , யாத்திரையில் தப்பாத மரணத்தையும் தரும். இதற்கு எவ்வித பரிகாரமும் கிடையாது.எனவே கரச யோகத்தை நீக்கியே சுப நிகழ்வுகளை செய்ய வேண்டும்.

கசரம் பார்க்கும் விதம் 

முகூர்த்தம் வைக்கும் நாளில் சூரியன் நிற்கும் நட்சத்திலிருந்து சந்திரன் நிற்கும் நட்சத்திரம் வரை எண்ணிவர அந்த தொகை ஒன்பதிற்கு மிகுந்து இருப்பின் ஒன்பதால் வகுக்க மீதம் உள்ள தொகை 3,4,5,9 ஆக கசர  யோகம் ஆகும்.

 1,2,6,7,8 ஆகியவை மிகுதியாக ஆக வந்தால் கசரமில்லை இது சுபமாகும்.

உதாரணம்
முகூர்த்த நாளன்று சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ளதாக கொள்வோம். சந்திரன் மகத்தில் இருந்தால் சூரியனினிலிருந்து எண்ண 10வது நட்சத்திரமாக வரும். இதை ஒன்பதால் வகுக்க மீதம் 1 கரசமில்லை. இது சுபமுகூர்த்தம் செய்ய ஏற்ற நாளாகும். மீதம் ஒன்பதிற்கு குறைவாக வரின் வரும் மிதத்தையே எண்ணியாக கொள்ள வேண்டும்.

~ குடும்ப ஜோதிடம் 
Related Posts Plugin for WordPress, Blogger...