Thursday, November 14, 2019

நேரமே உலகம் !





காலதேவி அம்மன் 

உங்களின் நேரத்தை பொற் காலமாக மாற்றிக் கொள்ள காலதேவியை வணங்குங்கள்.


12 ராசிகள்,
27 நட்சத்திரங்கள்,
9 நவ கிரஹங்கள் அமைந்துள்ள 'காலதேவி அம்மன்' சிலை.

ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது.அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால்,அதை நம்ப முடிகிறதா!அதுவும் நம்மூரில்.....

அக்கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி கிராமத்தில் உள்ளது. இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம்

நேரமே உலகம்'’

புராணங்களில் வரும் கால ராத்திரியை தான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர். இவள் இயக்கத்தில் தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது.

காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு.

நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம்.

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட்டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது.

இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்றுதான்

பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது.

கோயிலை தலா 11 சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் போதும்.

கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை காலச் சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது,  தாயே ! எனது நேரத்தை உன் வசம் ஒப்படைக்கிறேன். வரும் காலத்தை எனக்கு நல்லதாக  தந்தருள வேண்டுகிறேன் என வேண்டினால் போதும்.

செல்லும் வழி:

மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, ஆட்டோக்களிலோ செல்லமுடியும்.

தெரியாதவர்கள் சாதாரண நாட்களில் செல்வதை விட பெளர்ணமி, அமாவாசை நாட்களில் செல்வதே சிறப்பு.

இரவு நேரக் கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது.

Friday, November 1, 2019

காலங்களை ஆள்வதில் கோள்களின் விளையாட்டு






காலங்களை கிரங்கங்கள் எவ்வாறு ஆள்கிறது என்பதை காண்போம்

சூரியன்                    அயனம் 
சந்திரன்                   நிமிடம் 
செவ்வாய்               வாரம் 
புதன்                         ருது ( இரண்டு மாதங்கள் )
குரு                           மாதம் 
சுக்ரன்                       பட்சம் ( 15 நாட்கள் )
சனி                           வருடம் 

சூரிய வீதியை கிரகங்கள் கடக்கும் கால அளவுகளை நாம் அறிவோம் .

ஹோரை மற்றும் பிரசன்னத்தின் வழியே  ஒருவரின் பலனை துல்லியமாக அறிய  கிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்ட காலங்களை அறிவது அவசியம். மேற்கண்ட விதிகளின் வழியே பலன்கள் ஏற்படும் காலங்களை மிக துல்லியமாக அறிய முடியும் .

சப்த தாதுக்களும் கிரகங்களும்




சப்த தாதுக்களும் கிரகங்களும் 

உண்ணும் உணவு உடலில் ஏழு தாதுக்களாக பிரியும். இவையே உடலை வளர்க்கும் மற்றும் பாதுகாக்கும். அவற்றிற்கு உரிய காரக கிரகங்கள் இவை

சூரியன்                    எலும்பு 
சந்திரன்                  இரத்தம் 
செவ்வாய்              மச்ஜை 
புதன்                         தோல் 
குரு                            கொழுப்பு 
சுக்ரன்                      சுக்ல சுரோணிதம் 
சனி                            தசை

ஜாதகத்தில் சூரியன் பலமற்று காணப்பட்டால் எலும்பு தேய்மானம் உண்டாகும். சந்திரன் பலமற்று இருப்பின் இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும்.
Related Posts Plugin for WordPress, Blogger...