Monday, March 9, 2020

நாழிகை விநாழிகை அளவு கணித முறை.


நாழிகை விநாழிகை அளவு கணித முறை.

2 க்ஷணம் = 1 இல்லம்
2 இல்லம் = 1 காஷ்டை
2 காஷ்டை = 1 நிமிஷம்
2 நிமிஷம் = 1 துடி
2 துடி           = 1 துரிதம்
2 துரிதம்   = 1 தற்பரை
10தற்பரை = 1 பிராணன்
6பிராணன் = 1 விநாழிகை
60 விநாழிகை  = நாழிகை / கடிகை
1 நாழிகை = 360 பிராணன்
60 நாழிகை = 21600 பிராணன்
3 3/4 நாழிகை = 1 முகூர்தம்
30 நாழிகை = ஒரு பொழுது
60 நாழிகை = 1 நாள்
ஒரு நாள்  = 24 மணி
ஒரு நாழிகை = 24 நிமிடம்
2 1/2 நாழிகை = 1 மணி
1 முகூர்தம் = 1.30 மணி நேரம்

ஒரு நாளைக்கு சுமார் 21600 சுவாசங்கள் என்பதையே சிதம்பரத்தில் பொன்னம்பல கூரையின் அணிகளாக வெய்து இருக்கின்றனர்.

மனிதனின் ஆயுள் சக்கரம் 120 வருடங்கள் எனில் 21600 x 365.25 x 120..

Thursday, November 14, 2019

நேரமே உலகம் !





காலதேவி அம்மன் 

உங்களின் நேரத்தை பொற் காலமாக மாற்றிக் கொள்ள காலதேவியை வணங்குங்கள்.


12 ராசிகள்,
27 நட்சத்திரங்கள்,
9 நவ கிரஹங்கள் அமைந்துள்ள 'காலதேவி அம்மன்' சிலை.

ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது.அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால்,அதை நம்ப முடிகிறதா!அதுவும் நம்மூரில்.....

அக்கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி கிராமத்தில் உள்ளது. இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம்

நேரமே உலகம்'’

புராணங்களில் வரும் கால ராத்திரியை தான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர். இவள் இயக்கத்தில் தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது.

காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு.

நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம்.

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட்டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது.

இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்றுதான்

பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது.

கோயிலை தலா 11 சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் போதும்.

கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை காலச் சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது,  தாயே ! எனது நேரத்தை உன் வசம் ஒப்படைக்கிறேன். வரும் காலத்தை எனக்கு நல்லதாக  தந்தருள வேண்டுகிறேன் என வேண்டினால் போதும்.

செல்லும் வழி:

மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, ஆட்டோக்களிலோ செல்லமுடியும்.

தெரியாதவர்கள் சாதாரண நாட்களில் செல்வதை விட பெளர்ணமி, அமாவாசை நாட்களில் செல்வதே சிறப்பு.

இரவு நேரக் கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது.

Friday, November 1, 2019

காலங்களை ஆள்வதில் கோள்களின் விளையாட்டு






காலங்களை கிரங்கங்கள் எவ்வாறு ஆள்கிறது என்பதை காண்போம்

சூரியன்                    அயனம் 
சந்திரன்                   நிமிடம் 
செவ்வாய்               வாரம் 
புதன்                         ருது ( இரண்டு மாதங்கள் )
குரு                           மாதம் 
சுக்ரன்                       பட்சம் ( 15 நாட்கள் )
சனி                           வருடம் 

சூரிய வீதியை கிரகங்கள் கடக்கும் கால அளவுகளை நாம் அறிவோம் .

ஹோரை மற்றும் பிரசன்னத்தின் வழியே  ஒருவரின் பலனை துல்லியமாக அறிய  கிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்ட காலங்களை அறிவது அவசியம். மேற்கண்ட விதிகளின் வழியே பலன்கள் ஏற்படும் காலங்களை மிக துல்லியமாக அறிய முடியும் .

சப்த தாதுக்களும் கிரகங்களும்




சப்த தாதுக்களும் கிரகங்களும் 

உண்ணும் உணவு உடலில் ஏழு தாதுக்களாக பிரியும். இவையே உடலை வளர்க்கும் மற்றும் பாதுகாக்கும். அவற்றிற்கு உரிய காரக கிரகங்கள் இவை

சூரியன்                    எலும்பு 
சந்திரன்                  இரத்தம் 
செவ்வாய்              மச்ஜை 
புதன்                         தோல் 
குரு                            கொழுப்பு 
சுக்ரன்                      சுக்ல சுரோணிதம் 
சனி                            தசை

ஜாதகத்தில் சூரியன் பலமற்று காணப்பட்டால் எலும்பு தேய்மானம் உண்டாகும். சந்திரன் பலமற்று இருப்பின் இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும்.

Wednesday, October 30, 2019

நைசர்க்கிக தசை


நைசர்க்கிக தசை 

ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்படும்  சந்தோஷமான, துக்க கரமான நிகழ்ச்சிகள் எப்போது வரும் என்பதைக் கண்டுபிடிக்க பலவகையான கிரக தசைகளைச் சொல்லியிருக்கின்றார்கள். விம்சோத்திரி தசை, பிண்ட தசை, நைசர்க்கிக தசை, அம்ச தசை, காலச்சக்கர தசை, ஜைமினி சூத்திரத்தின் படியான சர ராசி தசை, ஸ்திர தசை, திரிகோண தசை என பல வகைகள் உள்ளன . அவற்றில் நைசர்க்கிக தசை என்ன என்பதை இங்கே காண்போம்.

வராகமிகிரரின் பிருஹஜ் ஜாதகத்தில் நைசர்க்கிக தசை கணிப்பது குறித்து ஒரு இலகுவான வழியும் கொடுத்திருக்கிறார். அதாவது  ஒருவனின் வாழ்க்கையில்

முதல் ஒரு வருடம் சந்திர தசையும்

பின் இரண்டு வருடங்கள் செவ்வாய் தசையும்

பின்னர் ஒன்பது வருடங்கள் புதன் தசையும்

அடுத்து இருபது வருடங்கள் சுக்கிர தசையும் நடக்கும். ( 13 -32 )

33 முதல் 50 வயது முடிய குரு தசையும்

51 முதல் 70 முடிய சூர்ய தசையும்

எழுபதுக்கு மேல் மரணம் வரைக்கும் சனி தசையும் நடக்கும்
என்று சொல்லியிருக்கிறார்.

இது நைசர்க்கிக தசை அதாவது இயற்கையான தசை என்று அழைக்கப்படுகிறது.

Monday, October 7, 2019

தீதுறு நட்சத்திரங்கள்.



தீதுறு நட்சத்திரங்கள் !

"ஆதிரை பரணி கார்த்திகை
ஆயிலிய முப்புரம் கேட்டை
தீதுறு விசாகஞ் சோதி
சித்திரை மகம் மீராரும்
மாதனங்கோண்டார் தாரார்
வழி நடைப்பாட்டார் மீளார்
பாய்தனில் படுத்தார் தேறார்
பாம்பின் வாய் தேரை தானே"

தனம் கடனாக கொண்ட பேர்கள் அதாவது பொருளை கடனாக பெற்றவர்கள் அதனை திருப்பி தர மாட்டார்கள் எனவும் பயம் மேற்கொண்டோர் திரும்ப மாட்டார்கள் எனவும் நோய் என பாய்தனில் படுத்தவர் தேரர் மாட்டார் எனவும் மேலும் இது பாம்பின் வாய் சிக்கிய தேரை மீள்வதை போன்றதாகும் என் இந்த பாடலின் வரிகள் அமைந்துள்ளது.உங்களின் அனுபவத்தை கொண்டு நிச்சயிக்கவும்.

சுப முகூர்த்தங்களுக்கு நிஷித்தம் ( தீதுறு ) என இந்த பன்னிரண்டு நட்சத்திரங்களை குறிப்பிடுகிறார்கள்.


1.ஆதிரை,( திருவாதிரை )
2.பரணி,
3.கிருத்திகை,
4.ஆயில்யம்,
5.பூரம்
6.பூராடம்
7.பூரட்டாதி
8.கேட்டை
9.விசாகம்
10.சித்திரை
11.மகம்

இதில் பரணி, கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், பூராடம், பூரட்டாதி ஆகிய எட்டு நட்சத்திரங்கள், (அதோமுக நட்சத்திரங்கள், அதாவது, கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.

திருவாதிரை மேல்நோக்கு நட்சத்திரமாகும்

சித்திரை சுவாதி கேட்டை மூன்றும் சம நோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.

சுப நிகழ்விற்க்கு தவிர்க்க வேண்டிய மாதங்கள்.



விஷ மாதங்கள் - மல மாதங்கள்

எந்த மாதத்தில் பௌர்ணமியும் அமாவாசையும் ஏற்படவில்லையோ அந்த மாதம் விஷ மாதமாகும்.

எந்த மாதத்தில் இரண்டு பௌர்ணமியும் இரண்டு அமாவாசையும் ஏற்படுகிறதோ அந்த மாதம் மல மாதமாகும்.

விஷ மாதத்திலும் மலமாதத்திலும் சுப நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். 

ஆனால் சித்திரை , வைகாசி மாதங்கள் இதற்கு விதிவிலக்காகும். இந்த தோஷம் இந்த மாதங்களுக்கு இல்லை.


Related Posts Plugin for WordPress, Blogger...