Monday, December 29, 2014

தானத்தின் பலன்கள்


தானத்தின் பலன்கள்

ஜலத்தை அளிப்பவன் திருப்தியையும்
அன்னத்தை அளிப்பவன் குறைவில்லா சுகத்தையும்
எள்ளு அளிப்பவன் நல்ல சந்ததியையும்
தீபம் கொடுப்பவன் நல்ல கண்ணையும்
பூமியை அளிப்பவன் பூமியையும்
தங்கம் அளிப்பவன் தீர்கமான ஆயுளையும்
வீடு அளிப்பவன் உயர்ந்த மாளிகைகளையும்
வெள்ளி அளிப்பவன் அம்சமான ரூபத்தையும்
வேஷ்டி அளிப்பவன் சந்திர லோகத்தையும்
காளையை அளிப்பவன் அகண்ட ஐஸ்வரீயத்தையும்
வண்டி அளிப்பவன் அழகான பத்தினியையும்
அபய தானம் அளிப்பவன் தனத்தையும்
தான்யம் அளிப்பவன் நிலையான சௌக்கியத்தையும்
வேத தானம் ( ஞானத்தை ) அளிப்பவன் பிரம்மலோகத்தையும் அடைவான்.
எல்லா தானத்தை காட்டிலும் வேததானம் உயர்வானது!
தானத்தை யாருக்கும் செய்யலாம். ஆனால் இடமும் காலமும் பாத்திரமும் அனுசரித்து அளித்தால் பலன் அதிகம்.

இட்டார் பெரியார் !
இடாதார் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி !

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...