Monday, December 29, 2014

ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்.!


மனிதனுக்கு ஒழுக்கம் இன்றியமையாதது! 

ஒழுக்கத்தை நடைமுறைப்படுத்துபவன் யாராயினும் அவன் மேன்மையுறுவான். உடல்தூய்மை, மனத்தூய்மை, ஆகார நியமம் மற்றும் ப்ரம்மசர்யம் ஆகிய நியமங்களே ஒழுக்கம் எனப்படும். இது எல்லா தர்மங்களுக்கும் அங்கமாகும்.

ஒழுக்கம் இல்லாத தர்மம் பலத்தை கொடுப்பது இல்லை. வேதம் இறைபக்தி இவை ஒழுக்கம் தவறியவனை காப்பாற்றாது! மேலும் புனித தலங்களுக்கு செல்வது புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது ஹோம யாகங்கள் அனுஷ்டிப்பது இவைகளும் ஒழுக்கம் விட்டவனை பாதுகாக்காது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...