Thursday, September 5, 2019

அபரான்னம்.

பிதிர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம்.




பகல் பொழுதை  ஐந்து பாகமாக பிரித்து அதில்  நான்காம் பாகத்தில் உள்ள கால அளவே அபரான்னம் எனப்படும்  அபரான்னமே பிதிர்களுக்கு உகந்த காலமாகும். சிராத்த திதி இரண்டு நாட்களிலும் இருந்தால் அபரான்ன காலத்தில் திதி அதிகமாக உள்ள அன்றுதான் சிராத்த திதி கடைபிடிக்க வேண்டும்.

இந்த அபரான்ன காலத்தில்தான் பித்ருக்கள்  நாம் அளிக்கும் எள்ளும் தண்ணீரையும் உணவாக அருந்தி நம்மை ஆசீர்வதிக்க வருவார்கள். குதப காலத்திலும் தொடர்பு இருப்பின் இன்னும் விசேஷமாகும்  என்கிறது கதிவிலோசனம் எனும் பழமையான சாஸ்திர நூல்.

குதப காலம் என்பது பகல் பொழுதை பதினைந்து பாகமாக பிரித்து அதில் எட்டாவது பாகமே குதப்ப காலமாகும் . பகல் பொழுது  தோராயமாக 30 நாழிகை அல்லது 12 மணி நேரம் எனில் 12  / 15 = 48 நிமிடம் அல்லது இரண்டு நாழிகை அளவு ஆகும்.

காலை சூரிய உதயத்திலிருந்து கணக்கிட ஏழாவது பாகத்திலிருந்து குதப கால தொடக்கம்.48 x 7 = 336 நிமிடங்கள் 5 மணி 36 நிமிடங்கள் . காலை சூரிய உதயம் 6 மணி எனில் 6 + 5.36
= 11.36 மணி முதல் 12.24 மதியம் வரை குதப காலமாகும். சிராத்ததிற்கு இந்த குதப காலம் ஆன 11 மணி 36 நிமிடத்திலிருந்து 12 மணி 24 நிமிடம் வரை  கருப்பு எள்ளும் பெண் வயிற்று பிள்ளையும் சிறந்தது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...