Saturday, September 7, 2019

அறுபதாம் கல்யாணம் என்கிற மணி விழா ~ சாந்தி சமஸ்காரங்கள்

அறுபதாம் கல்யாணம் என்கிற மணி விழா

சாந்தி சமஸ்காரங்கள் ( பரிகாரங்கள் )



இந்து மத சமஸ்காரங்களில் மனிதன் செய்ய வேண்டியதாக
60 வகை சடங்குகள் சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் பல சடங்குகள்
அவனது குழந்தைப் பருவத்திலும், வாலிபப் பருவத்திலும்
அவனது தந்தையால் செய்யப்பட்டு விடுகின்றன.

மனிதன் தனக்கு "ஆதிபௌதீகம், ஆதிதைவீகம், ஆதிஆத்மீகம்" என்கிற
இயற்கை, தெய்வ குற்றம், தன் செயலால் ஏற்பட்ட பாவ காரிய பலன்கள்
ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும்
அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக
அவனது 59, 60, 61 மற்றும் 70 வயது துவக்கம் ,
78 ஆம் ஆண்டு துவக்கம், 80 ஆம் ஆண்டு நிறைவு, 100 ஆம் ஆண்டு நிறைவு
ஆகிய காலகட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளை
செய்து கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

ஓரு ஆண்டு முடிவில் ஜன்ம நக்ஷத்ர நாளில் சாந்தி அப்த பூர்த்தி

55 வயது ஆரம்பத்தில் பீம சாந்தி

உக்ர ரத சாந்தி

மனிதனின் 59 ஆம் ஆண்டு கால புருஷனில் உக்ர ரதனின் ஆளுமைக்கு அம்சமான உக்ரனை அமைதிப்படுத்தும் நோக்குடன் செய்யப்படும் சாந்தி "உக்ர ரத சாந்தி" என்று சொல்லப்படுகிறது. இதைத்தான் "ஷஷ்டியப்த பூர்த்தி", "மணிவிழா" என்கிறார்கள்.

அறுபது வயதில் திருமணம் போன்று இந்த விழா நடத்தப்படுவதால் இந்த விழாவில் அந்தத் தம்பதியர்களின் பிள்ளைகள் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இந்த "அறுபதாம் கல்யாணம்" என்கிற மணி விழா நிகழ்வு வயதான தம்பதியர்களுக்கு ஒரு மன நிறைவைத் தரும் விழாவாகவும் இருக்கிறது.



61 வயது ஆரம்பத்தில் சஷ்டியப்த பூர்த்தி

"ஷஷ்டியப்த பூர்த்தி" எனும் இந்த மணி விழாவில்  5, 9, 12, 13, 29, 33, 65, 125, 320 எனும் வரிசையில் தேவதைகளுக்கு கும்பங்கள் வைத்து வழிபாடுகள் நடத்தி அபிஷேகம் செய்யப்படுகிறது. முக்கியமாக ம்ருத்யுஞ்ஜய கலசமும் வரிசையாக பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மார்க்கண்டேயன், திக்பாலகர்கள், சப்தசிரஞ்சீவிகள், ஆயுள் தேவதை, வருஷம், அயனம், நட்சத்திரம், கணபதி, நவக்கிரகம், அதிதேவதை, ப்ரத்யதி தேவதை எனும் 13 கலச பூஜை செய்வது சிறப்பானதாகும்.

இதில் சிவ தீட்சை எடுத்துக் கொண்டவர்களுக்கும், சிவபூஜை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் ருத்ரர்களுக்காக 11 அல்லது 1 கலசமும், பஞ்சப்ரும்ம கலசங்களாக 5 அல்லது 1-ம், ஆன்மார்த்த மூர்த்தி ஸ்தாபனமாக 10 கலசமும் ஆக 16 அல்லது 44 கலசங்கள் வைத்து வழிபாடுகள் நடத்தி அபிஷேகம் செய்வது மிகச் சிறப்பானதாகும்.

இந்த வழிபாட்டிற்குப் பின்பு தைல தானம், ஆஜ்யதானம், உதகபாத்ர தானம், வஸ்திர தானம், நவதானிய தானம், பூ தானம், கோ தானம், தில தானம், தீப தானம், ருத்ராட்சம் அல்லது மணி தானம், எனும் தச தானம் செய்து உமா மகேஷ்வர பூஜை எனும் வயோதிகத் தம்பதி பாத பூஜை செய்து திருநாண் பூட்டுதல் செய்து ஆரத்தி எடுத்து நிறைவு செய்தல் வேண்டும்.

இந்த மணிவிழா நிகழ்வுகள் தமிழ்நாட்டில் திருக்கடையூர் எனும் ஊரிலுள்ள சிவத்தலத்தில்தான் அதிக அளவில் செய்யப்படுகிறது. இங்கு செல்ல இயலாதவர்கள் அருகிலுள்ள ஏதாவது ஒரு கோயிலில் செய்து கொள்கின்றனர்.



70 வயது ஆர்ம்பத்தில் பீமரத சாந்தி

72 வயது ஆர்ம்Uத்தில் ரத சாந்தி

77 வயது 7 மாதம் 7ம் நாள் ஆர்ம்Uத்தில் விஜயரத சாந்தி

மனிதனின் 78 ஆம் ஆண்டு துவக்கத்தின் போது விஜயன் எனும் ருத்ரனின் சாந்திக்காக அவரை அமைதிப்படுத்தும் பொருட்டு "விஜயரத சாந்தி" சடங்கு செய்யப்படுகிறது.

கொள்ளுபேரன் பிறந்த நாளில் செய்யப்படுவது கனகாபிஷேகம்

மனிதனின் 80 ஆம் ஆண்டு முடிந்து எட்டாவது மாதம் ஜன்ம நட்சத்திரத்தன்று "சகஸ்ர சந்திர தர்சன சாந்தி" செய்யப்படுகிறது.

85 வயது முதல் 90 வயது வரை . ம்ருத்யுஞ்ய சாந்தி

மனிதனின் வாழ்க்கையில் 100 ஆண்டு முடிந்து 101 ஆரம்பமாகும் போது செய்யப்படும் சாந்தி "சதாபிஷேக கனகாபிஷேகம்" என்று அழைக்கப்படுகிறது. இதுவே "அஷ்டோத்தர சதருத்ர கலசாபிஷேகம்" என்றும் சொல்லப்படுகிறது.

120 வயது சாந்தி.பௌஷ்டிகம்.

மேலே சொல்லப்பட்ட அனைத்தும் சாந்தி குசுமாசுரம் மற்றும் சாந்திரத்னாகரத்தில் உள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...