Saturday, September 7, 2019

ஜனனி ஜன்ம சௌக்யானாம் !

                  ஜனனி ஜன்ம சௌக்யானாம் வர்தநீ குலஸம்பதாம்
                  பதவி பூர்வ  புண்யாணாம் லிக்ய தே ஜன்ம பத்திரிகா !




ஜாதகத்தில் லக்கினாதிபதி வலுத்திருந்தால் ஒருவரது ஜென்மம் சகல பாக்கியத்துடன் சீரும் சிறப்புமாக அமையும். ஈதலும் இசைப்பட வாழ்தலும் என்பதற்கு இணங்க வாழ்க்கை அமையும். தோன்றின் புகழோடு தோன்றுக என்பது வள்ளுவர் வான்மறை. ஒருவரது ஜாதகத்தில் லக்கினம் சூரியன் சந்திரன் மூன்றும் வலுத்திருந்தால் மேற்கண்ட நிலையில் வாழ்க்கை அமையும். உடல் உள்ளம் உயிர் மூன்றும் சிறப்புடன் செயலாற்றும்.

சுகாதிபதி அதிபதி வலுத்திருந்தால் தன்னுடைய குலம் சகல சம்பத்துடன் தழைத்து ஓங்கியிருக்கும். பேரன் கொள்ளுப்பேரன் வரை தன் வாழ்நாள் சகல வசதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கும். மனை வாகன தாயாதி வகைகள் அனைத்தும் சிறப்பாக அமையும்.

பூர்வபுண்ணியாதிபதி வலுத்திருந்தால் இம்மையில் அரசனுக்கு நிகராகவும் மறுமையில் தேவேந்திரப்பதவி, - சிவலோகப்பதவி - விஷ்ணுலோகப்பதவி ` சாலோக சாமிப சாரூப சாயுச்சிய பதவிகளை ஒருவன் பெறுவான்.
அவரவர் புண்ணியமே மக்கட் செல்வம் என்பது ஆன்றோர் வாக்கு. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் என்பதற்கிணங்க தொட்டதெல்லாம் பொன்னாகும். எண்ணங்கள் ஈடேற மனமகிழ்வுடன் வாழ்வர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...