Sunday, December 13, 2015

ஜோதிட பழமொழிகள்.


ஜோதிட பழமொழிகள்


ஜோதிட (கிழமை) பழமொழிகள்.

ஞாயிறு (பயணம்) நாய் பட்ட பாடு.
திங்கள் பயணம் திரும்பாப் பயணம்.
திரும்பிப் பார்த்தல் திங்கட்கிழமை.
செவ்வாயோ வெறும்வாயோ !
செவ்வாயோ,வருவாயோ !
கேட்டை,மூட்டை , செவ்வாய் கிழமை.
பொன் அகப்பட்டாலும் புதன் அகப்படாது.
புற்றில் இருக்கும் பாம்பும் புதனில் புறப்படாது.
சனிப்பிணம் தனிப் போகாது.
ஸ்திர வார காரியம் (சனி வாரம் ) ஸ்திரமானது.
·  பத்தில் குரு பதவிக்கு இடர் !
·  பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும் !
·  மறைந்த புதன் நிறைந்த கல்வி !
·  பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும் !
·  ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு
·  எட்டில் சனி நீண்ட ஆயுள்



·  குரு பார்க்க கோடி நன்மை !
·  குரு நின்ற இடம் பாழ்
·  பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது !
·  விதி போகும் வழியே மதி போகும். !
·  குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?

·  சனி பார்த்த இடம் பாழ் !
·  சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது !
·  சனி நீராடு !
·  சனிபகவானைப் போன்று கெடுப்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை
·  அகப்பட்டவனுக்கு அஷ்டத்தில் சனி
·  சனி பார்க்கும் இடம் பாழ்.

·  இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே !
·  நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை !
·  வைத்தியன் கையை பிடிப்பான். ஜோதிடன் காலை பிடிப்பான் !
·  ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க !


·  கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும் !
·  கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும் !
·  மேஷ ராகு மேன்மையை கொடுக்கும் !
·  துலா கேது தொல்லை தீர்க்கும் !

·  சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான் !
·  சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும் !
·  சித்திரை அப்பன் தெருவிலே !

· பரணி தரணி ஆளும் !
·  மகத்துப் பெண் பூரத்துப் புருஷன் !
· மகத்துப் பெண் ஜெகத்தினை ஆளுவாள் !
·  சுவாதி சுக்ரன் ஓயா மழை !
·  அவிட்டம் , தவிட்டுப் பானையிலே பணம் !
· கேட்டை கோட்டை கட்டி ஆளும் !
· ஆனி மூலம் அரசாளும் – கன்னி மூலம் நிர்மூலம் !
· பூராடம் போராடும் !
· பூராடம் நூலாடாது !
· உத்திரத்தில் ஓர் பிள்ளையும் ஊர் கோடியில் காணி நிலமும்   போதும் !

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...