Wednesday, December 16, 2015

ஜாதகன் விரும்பும் சுவைகள் !



ஜாதகன் விரும்பும் சுவைகள் !

இலக்கனத்தோன் குருவானால் தயிரிச் சிப்பான் !
              இசைந்த புதனானாலே புளிப் பிச்சிப்பான் !
நலமுடன் சுக்ரனானால் சர்க்கரை தேனிஷ்டம் !
         நவிலுவாய் சனிக்குக் கீரை விருப்பமாகும் !
நலத்தோனோடே ராகுகேது குளிகன் சேர்ந்தால்
               சத்திபூஜை செய்து மாங்கிஷம் புசிப்பார் !
நலமாய் வியாழனானால் ஊஷ்ண பஷண மென்றும்
      நவில்புதன் சந்திரன் குளிர்ந்த சோறுண்பாரே ! ~ ஜம்புமஹரிஷி வாக்கியம்.


இலக்கனாதிபதி குருவானால் தயிர் விருப்பம்.
புதனானால் புளிப்பு சுவையும்,
சுக்ரனானால் இனிப்பு சுவையும்,
சனியானால் கீரை வகைகளும்,
ராகுகேதுக்கள் லக்னத்தில் இருக்க உடன் குளிகன் சேர்ந்தால்
சத்திபூஜை செய்து மது மாமிச வகைகளை புசிப்பார்.

குரு லக்னாதிபதியானால் உடலுக்கு உஷ்ணம் தரும் ஆகாரங்களை உண்பார்.
புதனும் சந்திரனும் ஆனால் குளிர்ச்சி தரும் பதார்த்தங்களை உண்பர்.
சூரியனும் செவ்வாயும் லக்னாதியானால் அன்ன பதார்த்தங்களை சுடச்சுட உண்பர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...