Thursday, December 17, 2015

நேத்திரம்



நேத்திர நோய் !

ஜன்மலக்கினம் மேஷமாய் ரவியிருந்தால்
ஜனித்தவன் நேத்திரரோகி யாயிருப்பான்
அன்புடனே கடகலக்கினம் ரவியிருந்தால்
ஆகுமப்பாநேத் திரபங்க மென்றேசொல்லு
இன்புடனேதுலா சிங்கந்தனிலே சூரியன்
இருந்தாலும் இரவில்கண் தெரிதப்பா
பன்னிரண்டு இரண்டில் ரவிபாபர் சேர்ந்தால்
பலநாளும் கண்நோயால் கலங்குவாறே!                  ~ ஜம்பு மகரிஷி வாக்கியம் 


ஜன்ம லக்னம் மேஷமாயிருந்து சூரியனிருந்தால் ஜாதகன் கண் நோய் உள்ளவராக இருப்பார்.கடக லக்கினமாகி சூரியனிருந்தால் நேத்திர பங்கமாகும். துலா லக்கினம் சிம்மலக்னமாய் இருந்து சூரியனிருந்தால் இரவில் கண் பார்வை தெரியாது . இரண்டு பன்னிரண்டாம் இடத்தில் சூரியன் பாப கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் சதா காலமும் கண் நோய் இருக்கும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...